Tuesday, March 28, 2006

சின்ன மலரும் நினைவு

இன்னும் மூன்று நாட்களில் தொழில் ரீதியான வாழ்க்கைக்கு விடுமுறை தரப்போகிறேன்.சென்னைக்கு வந்தபோது "வைரமுத்து கட்டிடக்காடு என்றாரே" அதற்குள் தொலைந்தது போல் இருந்தது.மாதம் ஒரு அறை,அப்போது தான் பழக ஆரம்பித்திருப்பேன்...அதற்குள் வேறு அறை மாறுவோம்.சுமார் எட்டு மாதங்கள் வேலையே கிடைக்கவில்லை கடுப்பாகி விட்டேன்.

ஆனால் நின்று ரசித்து சிரிக்காமல் ஒரு கணமும் கழிந்ததில்லை.அப்போது சதர்லேண்ட் கம்பெனி இன்டர்வியூ நுங்கம்பாக்கத்தில் வாராவாரம் நடக்கும்.எங்களுக்கு அங்கே தான் இன்னும் பல நேர்காணல்கள் பற்றி தகவல் சொல்லும் புது நண்பர்கள் கிடைப்பார்கள். அங்கே முதலில் ஒரு டேப்பை ஓட விடுவார்கள் அப்புறம் அது சம்பந்தமாக கேள்விகள் வரும் இது மிக எளிமையானது மிகக்குறைந்த அளவிலேயே வெளியேற்றப்படுவார்கள்.அடுத்தது கிராமர்
இப்படியாக எல்லோரும் வெளியே வந்து விட்டோம், எங்கள் ஒரே ஒரு அறை நண்பன் மட்டும் கடைசி வரை தாக்கு பிடித்தான்.கடைசியில் அவனுக்கும் தோல்வியே மிஞ்சியது

எனக்கு புரியவில்லை ஏனென்றால் ஆங்கிலம் தான் கடுமையான சுற்று அதிலேயே தப்பியவன் பர்ஸனல் இன்டர்வியூ எளிமையானது எப்படி விட்டான்? அவனிடமே கேட்டேன் சொன்னான்:

“ஒண்ணுமில்லீடா ‘டெல் அபவுட் யூ’ன்னாங்க ஐ ஆம் சத்தியமங்கலம் ஃப்ரம்
பழனிச்சாமின்னேன்”

1 comment:

பொன்ஸ்~~Poorna said...

//ஐ ஆம் சத்தியமங்கலம் ஃப்ரம்
பழனிச்சாமின்னேன்”
//
- :) :)
நல்லா எழுதி இருக்கிறீர்கள் :)