Thursday, March 23, 2006

வாஷர்மேன்பேட் / வண்ணாரப்பேட்டை

ஆங்கிலத்தில் பெங்களூர்ட் என்கிற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது.

சைக்கில், றூமற், ப்லே, ளாறி,ஸ்கூட்டற் இவை பார்க்கவே ஏதோ மாதிரி இருக்கிறது இல்லையா, அப்புறமென்ன நமக்கே தெரியாமல் இவற்றை ஏற்றுக்கொண்டோம் தமிழாக, என்று தானே அர்த்தம்.அதுவும் சென்னையில் கொஞ்சம் ஓவற் "பேட்டையை பேட் என்று சொல்" என எந்த இங்கிளீஷ் வாத்தியார் சொன்னாரோ தெரியவில்லை.சைதாப்பேட், புதுப்பேட், கொற்க்குப்பேட் என்று கொலை செய்கிறார்கள், அது கூட பரவாயில்லையப்பா திருவல்லிக்கேணி எவ்வளவு அழகான பெயர்? ஏன் ட்ரிப்ளிகேன் ஆனது?

உடனே ஒரு கதை சொல்வார்கள் திருவல்லிக்கேணி ஆங்கிலேயனுக்கு உபயோகிக்க கடினமாக இருந்தது அதனால் அப்படி மாறி விட்டது சரி அதற்காக அரசாங்க கோப்புகளில் கூடவா? யாரோ செய்த தவறை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

சரி இது கூட சற்று ஏற்புடைய வாதமே எந்த ஆங்கிலேயன் தமிழ் புரிந்து கொண்டு அழகாக வாஷர்மேன்பேட் என்று வைத்தான்? வண்ணாரப்பேட்டையை எவ்வளவு சிரத்தை எடுத்து ஆங்கிலப்படுத்தி இருக்கிறார்கள் இன்னும் உண்டு லிட்டில் மவுண்ட், ரெட் ஹில்ஸ் (அட அட) எனக்கு தெரிந்து தமிழ் இத்தனை வகைப்படும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, கேரளா, சிங்களம், மலேசியா, சுக்வீந்தர் சிங்.

No comments: