Tuesday, December 27, 2005

பொது அறிவு

எனக்கு தெரிஞ்ச அரிதுன்னு (நம்புற) பத்து விஷயங்கள் இதோ:

1.வின்டோஸில் con என்று (எந்த கேப்பிடல்,சிறிய எழுத்து காம்பினேஷனிலும்) எந்த ஃபைலையும் சேமிக்க முடியாது
2.ஃப்ளாஷ்பேக் முறையில் முதலில் கதை சொன்னவர் அல்லது அதை கண்டுபிடித்தவர் 'அகிரா குரோசோவா'
3.ஒரு நிமிடத்திற்கான செல்ஃபோன் கட்டணம் குறைவாக உள்ள நாடு 'இந்தியா'
4.குளிர்நீரானால் தலையிலிருந்தும் சுடுநீரானால் காலிலிருந்தும் ஊற்றி குளிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதா.
5.முட்டையில் வெள்ளை கரு தான் உயிர் மஞ்சள் கரு அது உண்ண இருக்கும் உணவு
6.எஸ்.ஜே.சூர்யா நடித்த முதல் படம் 'நேருக்கு நேர்'
7.தமிழிலும் , ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு ஒரே பொருள் தரும் வார்த்தை
'ஏடிட்டோரியல்' அதாவது ஏடு + இட்டோர் + இயல் ஆங்கிலத்தில் editorial
8.உலகப்புகழ் பெற்ற வலது கை ஆட்டக்காரரான சச்சினிடம் ஆட்டோகிராஃப்
வாங்கினால் கவனியுங்கள் அவர் இடது கையில் தான் போடுவார் (அவர் இடது கைப்பழக்கம் உள்ளவர், ரொம்ப சுற்றி வளைத்து விட்டேனோ)
9.தேன் தலையில் தேய்த்தால் நரைக்காது,பாம்பு தேன்,பால் சாப்பிடாது
10.காந்தி வாழ்நாளில் விமானப்பயணம் செய்ததில்லை (அப்போது விமானம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது)

Thursday, December 22, 2005

ஒரு வெண்பா (என்றே நினைக்கிறேன்)

ரொம்ப நாளா வெண்பா எழுத ஆசை... எழுதிட்டேன்

பாறைகளில் பொறித்தார்கள் பெருமை தனை
சேர சோழ பாண்டியர்கள் - அறிந்தால்
வருந்துவார்கள் அப்பளத்தில் எதற்கு இந்த
வீரத்தமிழன் எழுதுகிறான் பெயர்?

Thursday, December 15, 2005

சிவாஜி சிவாஜி சிவாஜி - வெளிவராத தகவல்கள்

என்னப்பா இது எங்கிட்டு திரும்பினாலும் சிவாஜியப்பத்தியே பேசுறாங்க
நானும் சும்மா இல்லாம விசாரிக்க ஆரம்பிச்சேன்
ஆச்சர்யம்... நிறைய புது விஷயங்கள் கெடைச்சுது
விட்டா வேற பத்திரிக்கையோ ப்லாக்லயோ பப்ளிஷ் பண்ணிடுவாங்க
அதுக்கு முன்னாடி பிடிச்சிக்கோ

1.இந்தியாவில் முதல் முறையாக ஓட்டு முறையை கொன்டு வந்த அரசர் சிவாஜி
2.போரில் வெற்றி பெற்றாலும் தோற்ற நாட்டினரின் பெண்களையோ, மத புனித பொருட்களையோ சேதம் செய்ய தடை விதித்த ஜென்டில் மேன்
3.தமது நாட்டிலேயே மற்ற மதத்தினருக்கு சம உரிமை தந்தவர் (அரச சபையிலேயே பதவி தரப்பட்டிருக்கிறது)
4.தமிழ்நாட்டில் இருக்கும் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் இவரால் வெற்றி கொள்ளப்பட்டவை
5.இவரது முழுப்பெயர் சிவாஜி போன்ஸ்லே
6.மகாராஷ்டிராவில் சிவாஜி பெயரில் ஒரு பல்கலைக்கழகமும் விமான நிலையமும் இயங்குகின்றன
7.மராத்தி இலக்கியத்திலும், நாட்டுப்புற கதைகளிலும் நிறைய ஹீரோயிஸ கதைகள் சிவாஜி பெயரில் உள்ளன

போதுமா....? என்னங்ணா சிவாஜி படத்த பத்திங்ளா அது ரஜினி நடிக்றார்னு கேள்விப்பட்டனுங்ணா
அடி விழறதுக்கு முன்னாடி கெளம்பறேனுங்கோவ்

Wednesday, December 14, 2005

தடுமாற்றம்

'சட்'டென்று மாறுகிறது...
இயல்பின் நிறம்!
ஏதோ ஒரு ஏலியன்
கற்றுத்தந்ததோ...
காமம்?

Tuesday, December 13, 2005

இது ரெண்டும் ஹைக்கூன்னு நம்பறேன்

ஒரு முறை ஹைக்கூன்னா என்னன்னே தெரியாம எழுதி திட்டு வாங்கினதும் கூகிள் - ல அதப்பத்தி ஆராய்ச்சி பண்ணினதுல எல்லா விவரமும் சுமார் 50 சொச்சம் ரூல்ஸும் கெடைச்சது
எதிர்மறை விமர்சனத்தால் குட்டிய சுந்தருக்கு நன்றிகள் பல

பக்திப் பாடலின் நடுவே
கண் மூடினேன்
நிர்வாணம்

புழக்கத்தில் பத்து பைசா
ஏர்செல் புண்ணியத்தால்

அப்படியே இன்னொரு பதிவின் பக்கம் (இன்னமும் தமிழ் மணத்தில பதிவு பண்ணலை ஹி ஹி)

Sunday, December 11, 2005

பாரதியார் , ரஜினி , நான்

இன்று பாரதியார் பிறந்த நாள், தமிழக அரசு ஒப்புக்கு தரும் பேப்பர்
விளம்பரம் தவிர நான் எதிலும் இது பற்றி பார்க்கவில்லை
புதுக்கவிதை என்ற பெயரில் எதையோ கிறுக்கும் ஒரே காரணத்தால்
எனக்கும் பாரதி சொந்தமே

எல்லோரும் மறந்தார்கள் என்று புலம்புவதிலோ திட்டுவதிலோ அர்த்தமில்லை
என்றே நம்புகிறேன்.
சிறு வயதில் கேட்ட ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சி நினைவில் வருகிறது(நானும் பாரதி பாடல்களில் அதிக புலமையுள்ளவனல்லன் என நினைவில் கொள்க)
அதில் பேச்சாளர் சொன்னார்: காணி நிலம் வேண்டுமென்ற பாரதி பாடல் உங்களுக்கு நினைவில் இருக்கலாம் அந்த பாடலின் இடையே கத்தும் குயிலோசை கேட்க வேண்டும் என்றொரு வரி வரும். என் வகுப்பில் ஒரு மாணவன் கேட்டான் "அதெப்படி குயில் கத்துமென்று சொல்லலாம்? கூவும் என்றல்லவா சொல்ல வேன்டும்? பாடலில் பிழை" என்று.நான் சொன்னேன்,"அதற்கு இரண்டடி முன்னால் இளம்பென்னொருத்தி அருகில் வேண்டுமென்றானே இளம்பெண் அருகில் இருந்தால் உனக்கு குயில் கத்துமா கூவுமா" என்று.கைத்தட்டல்
பற்றி கேட்கவா வேண்டும்?
(பாடல் வரிகள் முழுமையாக நினைவில் இல்லை மன்னிக்கவும்)

அடுத்தது ரஜினி

நமக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும் விளம்பரங்கள் விடாது.
எஸ் எம் எஸ் பண்ணுங்க ரஜினி கூலிங் கிளாஸ் ரஜினி சட்டை
என்று ஒரே ரவுசு.ஒரு படத்தில் வடிவேலு சொல்வார்: நான் ஏன்டா நைட் 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போறேன்னு.அது போல தமிழ்நாட்டுல இருக்கிறது குத்தமாடான்னு கேட்கணும் போல.எனினும் எனக்கும் ரஜினியை பிடிக்கும் என்ற வகையில் ஒரு விஷயம்.ரஜினி அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படத்தின் கன்னட பதிப்பில் அவர் கேட்டை திறந்து உள்ளே வரும் அவருடைய முதல் காட்சியில் அப்படியே நிறுத்தி கன்னட எழுத்துகள் ஸ்லைடு காட்டுவார்களாம்.அதில் எழுதியிருப்பதற்கு அர்த்தம் "சனியன் வந்துருச்சு".
முதல் படத்திலேயே ஒரு நெகட்டிவ் ரோலில் கலை வாழ்க்கையை ஆரம்பித்தவர்
சாதித்தவை அறிந்ததே.

கடைசியாக நான்
என்னடா சைட்ல சத்தமில்லாம ஒரு விளம்பரம் போட்றானேன்னு முறைக்க வேணாம் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் பாரதி பிறந்த நாளில் நானும் பிறந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே (அப்புறம் அவரல்லவா கவலைப்பட வேண்டும்)
சரி மீன்டும் இன்னொரு நாள் சந்திப்போம்
தமிழ்மணத்தில் சேர்க்கும்வரை என் இன்னொரு ப்லாக்- க்கு இங்கிருந்தே ஆதரவு
தரவும்

Friday, December 09, 2005

ஜோக்-காடு

பூக்காடுங்கிற பேர்ல நிறைய இம்சை பண்றது உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான்
இருந்தாலும் எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை
நாம தினமும் எவ்வளவோ ஜோக் கேள்விப்படறமே
அதெல்லாம் ப்லாக்ல சொன்னா என்னன்னு
இந்த மனுஷப்பய புத்தி இருக்கே அது ஒரு விஷயம் கேட்டு எஞ்ஜாய் பண்ணிடுச்சின்னா யார்ட்டயாச்சும் சொல்லணும்னு திரியும்
அப்டித்தான் எனக்கும் இப்படி தோணிச்சு
ஆனா பூக்காடு சரிப்படாது அங்க கவிதைகள் மட்டுந்தான் மலரணும் முடிஞ்சவரை

அதனால இன்னுமொரு இம்சையை தொடங்கறேன்
ஆனா கண்டிப்பா என்னை சிரிக்க வைச்ச ஜோக்ஸ் மட்டுந்தான்
ஸோ யாரும் பயப்பட வேணாம்
அதோட இணைய முகவரிக்கு போக இங்கே க்ளிக்கவும்
சீக்கிரமே தமிழ் மணத்திலயும் சேர்த்துடறேன்

Wednesday, December 07, 2005

பொருளாதார உயர்வு??

மழை சகதியில்
கிழிந்த சாக்கும், அழுக்கு வேஷ்டியுமாய்
உறங்கும்
பிச்சைக்காரன் தலைமாட்டில்
டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்

Monday, December 05, 2005

மன ரேகை

என் ஆயுளின் வெறுமைகளை
உன் காதல் நிரப்பவில்லை
அதை செய்துகொண்டிருக்கிறது....
வாழ்க்கை

Friday, December 02, 2005

கவிதையான்னு தெரியாது ஆனா சத்தியமா ஹைக்கூ இல்ல ஹி ஹி

...எழுதியிருந்தார்கள்
நாளைய ஸ்பெஷல் "வான் கோழி பிரியாணி"
நல்ல வேளை - உற்று பார்க்கும்
அந்த வான்கோழிக்கு
எழுதப்படிக்க தெரியாது

........................

பூப்பறிக்க கோடரி
சிசேரியன்
.........................

ஹி ஹி
-------
வளைவுகளை முந்தக்கூடாது
ரசிக்க வேண்டும்

Wednesday, November 30, 2005

மூன்று ஹைக்கூக்கள்

நீ என்னை அழைக்கும்போதெல்லாம்
சொல்ல நினைப்பேன்
"ஐ லவ் யூ"
ஆனால் சொல்வதென்னவோ
"ப்ரசென்ட் மேடம்"

-------------------------------

நீ கூப்பிடும்போதெல்லாம் தோன்றும்...
இதற்காகவே எனக்கு
பெயர் வைக்கப்பட்டதோ?

-------------------------------

பேனாவை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம்
உன்னிடமிருந்து வரவில்லை...
உன் பேனாவை என்னிடம்
தந்ததிலிருந்து வந்தது

Tuesday, November 29, 2005

ஆழ்காதல்

சூடாக என் மேல் விழும்
வெப்பக் காற்றை
குளிர்ச்சியான உன் பேச்சு
சமன் செய்து கொண்டிருந்தது

தூரத்து மணல் மேட்டில்
சிறுவர்கள் குதிப்பதாய்
கடல் நீர் மௌனத்தை
உடைத்துக்கொன்டிருந்தார்கள்

உன் கண்களும்-அந்தக்
கடலைப்போலவே
ஆழமாய்...அழகாய்...

எனக்கும் குதிக்க ஆசைதான்
என்ன செய்வது?
அவர்களைப் போல் எனக்கு
ஆழம் தெரியாதே...

Monday, November 28, 2005

சூட்சுமம் தேடல்

எறும்புகளின் சுவடுகள் போல
உலகெங்கும் நிறைந்திருக்கின்றன
மனிதர்களின் காதல்கள்

பிரபஞ்சத்தின் சிறுதுளி வெளிச்சத்தில்
கீற்றாய் ஒளிர்கிறது
காலத்தின் நமட்டுச் சிரிப்போடு சிங்கப்பல்

வெளி எல்லைகள் மறந்து
மிகப்பெரியதென நாம் கருதும்
மனிதக்கூட்டங்களில்
எல்லோருக்கும் பிடித்ததென கர்வப்பட்டதொரு
கவிதையை முன் வைத்தேன்...
ஒருவர் கூட புரட்டி பார்க்கவில்லை

Saturday, November 12, 2005

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்

எல்லோருக்கும் வணக்கம்

இன்னைக்கு பேப்பர்ல படிச்சேன் சிவகாசி படத்துக்கு கோர்ட்ல கேஸ்ன்னு
இது ஒரு அட்டு படம் அம்பது ரூபா வேஸ்ட் பண்ணிட்டானுகன்னு கேஸ் போட்டிருந்தா பரவால்லன்னு விட்டுருப்பேன்
"ப்ளாட்பார வக்கீல்"னு ஒரு டயலாக் படத்துல வருதாம் வக்கீல கேவலப்படுத்திட்டாய்ங்கடான்னு கேஸ்
நல்ல வேள நம்மூராளுக இன்டர்நேஷனல் லெவலுக்கு போவுல
ஏன்னா இங்க சர்தார் ஜோக் மாதிரி அங்க வக்கீல் ஜோக் ரொம்ப பிரபலம் (புக்கே இருக்கு)

இந்த மாதிரி சினிமா மேல கேஸ் போடறது அதிகமாக ரெண்டு காரணம் தான்
மக்களுக்கு சென்சிட்டிவிடி உணர்ச்சி வசப்படறது அதிகமாய்டிச்சி
அல்லது
ச்சீப் பப்ளிசிட்டி தேட்ற மனோபாவம் அதிகமாய்டிச்சி

நேத்து ப்ராஜெக்ட் கடைசி நாள் (அதனால தான் ப்லாக் எழுதலை) சுமார் 8 மணி டீம் லீடர் வந்து முடிச்சிட்டு
கெளம்பலாம்னான்.வடிவேலு மாதிரி "ஏன்டா அடிச்சது ரெண்டு மணி நேரம் ரெஸ்ட் ஒன் அவரா?" ங்கிற மாதிரி
பாத்தேன்...அவன் முறைச்சிட்டே போய்ட்டான்.ஓரளவு எல்லாம் முடிஞ்சதும் ஒரு ஃபோன் கால் "உடனே கெளம்பி வாடா தீர்த்தத்திருவிழா"ன்னு
பழைய படத்துல வர்ற கடவுள்கள் மாதிரி விஷ்க்னு மறைஞ்சேன்

சபை 'கலகலகல'ன்னு கூடுச்சு.ஊறுகாயில இருந்து தட்டுவட வரைக்கும் இருந்தது
சியர்ஸ் அடிக்கும்போது "ஏண்டா இதெல்லாம் பண்றோம்"னான் ஒர்த்தன்
நாஞ்சொன்னேன் "அடேய்...தண்ணியடிக்கும்போது கண்ணு பாத்து சந்தோஷப்பட்டுக்குது நாக்கு ருசிச்சும்,
மூக்கு நுகர்ந்தும் சந்தோஷப்பட்டுக்குது ஆனா இந்த காதுக்கு ஒண்ணுமே கெடைக்காது அத குஷி பண்ண தான்
'சியர்ஸ்னு சொல்றொம்'"னேன்
இன்னொருத்தன் சொன்னான் "அதெல்லாம் இல்லடா அளவு சரியா இருக்கான்னு பாத்துக்கத்தான்"ன்னு
உங்கள திருத்தவே முடியாதுடான்னு சியர்ஸ் சொன்னேன்

இன்றைய கவிதை

என்ன ஆட்டம் ஆடிருப்ப?
-------------------
அடிக்கடி சொல்லுவாரு எம் மாமன்
துடிவயசுல ரொம்ப ஆடாதடா - அப்புறம்
பொட்டப் புள்ள பொறக்கு மின்னு
எட்டும் பொண்ணுங்க அவருக்கு



நட்புடன்
கோகுல் குமார்

Thursday, November 10, 2005

அல்சர் எதனால் வருகிறது?

அப்போதெல்லாம்
என் ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு முத்தம் பரிசாய்த் தருவாள்...என் காதலி

இப்போது...
எதேச்சையான சந்திப்பில்
ஸ்நேகமாய் சிரிக்கிறான்
அவள் கணவன்

சம்பிரதாயப்பேச்சுகளுக்கு பிறகு
மெதுவாய்க் கேட்டேன்...
"உங்களுக்கு கவிதை எழுதத் தெரியுமா?"

Saturday, November 05, 2005

இந்தியாவுலயே நெ.1 பணக்காரனாக ஆசையா?

எல்லோருக்கும் வணக்கம்

வேலை விட்டதும் பக்கத்துலயே "அபிராமி"ல "மஜா" ஓடிச்சு பூந்துட்டேன்
பசுபதி காமெடி கலக்கல்ப்பா
என்ன...இந்த மசாலா படத்துல எல்லாம் ஹீரோயின் பாட்டுக்கு மட்டும் ஆட வர்ற மாதிரி இங்க விக்ரம் சண்டை போட வர்றார்

(விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்)
அப்புறம் நேத்து தான் சிவகாசி படத்தை பார்த்து தொலைச்சேன்
டைரக்டருக்கு "பில்ட்-அப்" கொடுத்த ஒரே படம் இதுவாத்தான் இருக்கும்
கஷ்ட காலம் இந்த படத்தையும் நூறு நாள் ஓட்டுவாய்ங்க

உஙளுக்கு இந்தியாவுலயே நெ.1 பணக்காரனாக ஆசையா?
ரொம்ப எளிது ஒரு லட்சத்துக்குள்ள எல்லா செலவையும் அடக்கி
நிகர விலை ஒரு லட்சம்னு ஒரு பிளான் கொண்டுவந்தா
பைக் வாங்கறவங்கள்ள 30% - 40% பேர் காருக்கு மாறுவாங்களாம்
நீங்க நெ.1 ஆக அதுவே போதுமாம்

அதே மாதிரி உலகத்துலயே நெ.1 ஆக...?
1.எய்ட்சுக்கு மருந்து கண்டு பிடிங்க (யார் கண்டா நோபல் பரிசு கூட கிடைக்கலாம்)
2.புத்தகங்கள போட்டொகாபி பண்றத தடுக்க வழி கன்டுபிடிங்க
3.சாஃப்ட்வேர்,புதுப்படம் இதெல்லாம் திருட்டு பண்றத தடுங்க (இத மட்டும் செஞ்சிட்டா பில் கேட்சை மிந்திடலாம்)

ஒரு பொண்ணு எழுதற மாதிரி கவிதைகள் எழுத எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அது கொஞ்சம் சவாலான விஷயம் இன்னும் முழுசா கைக்கு வந்திடலைனாலும்...
இன்றைய கவிதையும் அப்படித்தான்

முகவரி மறக்கப்பட்டதொரு பாடலோடே
இதயத்தை அதிர்வுக்குள்ளாக்கும்...
ஏன் எதற்கென்றே தெரியாமல் ஆரம்பித்து
அவசரமாக முடிக்கப்பட்டதொரு பழைய காதலின் சொச்சம்

கதறுதலுமில்லாது உதறுதலுமியலாது
உறுத்தும் வலி மாற்றப்படும்...
தற்காலிகமாக வேறு சேனலுக்கு

குடும்பமே அதிசயமாய்ப் பார்த்த
குட்டியைத் தாடையால் கவ்வி
அரவணைத்துப் போய்க்கொண்டிருந்த
அம்மிருகத்தைப் பார்க்கையில் தோன்றியது...
"அது நான் தானோ"


சரி... திங்கள் சந்திப்போம்
உடம்பு மனசு எல்லாதையும் நல்லா பாத்துக்கிடுங்க
நட்புடன்
கோகுல்

Thursday, November 03, 2005

முகமூடி

சம்பிரதாயத்துக்காக வைத்த பட்டாசு
வெடிக்குமா வெடிக்காதா என
பயத்தோடு எதிர்நோக்கும்போது
மெதுவாக எட்டிப்பார்க்கும்
எப்போதோ கை விடப்பட்ட
குழந்தைத்தனம்

Tuesday, October 25, 2005

எதிர்ப்பதம்

எனக்குப் பிடிக்கவில்லை
வியர்வை வாடையோடு
மாற்றாத உடைகளினுள்
குளிக்காத உடல்கள்

ரயிலின் ஒவ்வொரு அதிர்விலும்
நெருக்கமாகும் எனக்கும் சேர்த்து
கழுத்து வரை அவள் போர்த்துவது கூட
துவைக்காத போர்வை தான்

அந்தக் குளிரான இரவில்
காதலின் உரிமையோடு
உச்சந்தலை திருப்பி - அவள்
காட்டிய திசையிலிருந்தது
எங்களைப் போலவே
அந்த அழுக்கு நிலா

Sunday, October 23, 2005

தேவதையல்ல

நீ தூசி விழுந்ததில்
கண் கலங்கிய போது தெளிந்தேன்...
"மனுஷி தான்"
மணற்பரப்பில் கிறுக்குவதிலிருந்து உன் விரல்களும்
மாலை வெயிலை ரசிப்பதிலிருந்து என் கண்களும்
சலிப்படையத் தொடங்கிய வேளையில்
நீ வெட்கப்பட ஆரம்பித்தாய்
நான் பயப்பட ஆரம்பித்தேன்

Saturday, October 22, 2005

காதலம்

கண்ணாடி என்பதற்கு
அர்த்தம் கேட்டாய்
கண்கள் என்றேன் - மறுத்துவிட்டு
கவிதை என்றாய்

பூக்களுக்கு வேறு பெயர் கேட்டாய்
உன் புன்னகை என்றேன்
பொய்யென்று தலையாட்டி - புல்லின்மேல்
பனித்துளி என்றாய்

வெட்கத்திற்கு எதிர்ச்சொல் கேட்டாய்
நீ என்றேன்...
அடித்துவிட்டாய்!

முத்ததிற்கு விளக்கம் கேட்டாய்
எனக்கெதற்கு வம்பு...தெரியாது என்றேன்
வெட்கத்தோடு தலை குனிந்து
வேகமாய் கேட்டாய்...
"கற்றுத்தரவா?" என்று

Wednesday, October 05, 2005

TROUBLE IN VIEWING THIS BLOG CLICK HERE

Hi All
I thank you very much for visiting my blog
My blog is maintained with Unicode in Tamil language
Here I given some steps to follow to view this blog
1. Download any unicode tamil font by searching google / click here
2. Save the file to any drive
3. Goto C Drive (or where ur windows folder kept) and follow this way c-->windows-->
fonts-->(click)file-->install new font-->there install the font
4. Now refresh this blog page
5. If you still not getting it on the browser window goto view -->encoding-->(click)unicode 8
6. Now refresh , still if problem remains ask me pls.










Mydesign Posted by Picasa