சூடாக என் மேல் விழும்
வெப்பக் காற்றை
குளிர்ச்சியான உன் பேச்சு
சமன் செய்து கொண்டிருந்தது
தூரத்து மணல் மேட்டில்
சிறுவர்கள் குதிப்பதாய்
கடல் நீர் மௌனத்தை
உடைத்துக்கொன்டிருந்தார்கள்
உன் கண்களும்-அந்தக்
கடலைப்போலவே
ஆழமாய்...அழகாய்...
எனக்கும் குதிக்க ஆசைதான்
என்ன செய்வது?
அவர்களைப் போல் எனக்கு
ஆழம் தெரியாதே...
Tuesday, November 29, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
test
Post a Comment