Tuesday, November 29, 2005

ஆழ்காதல்

சூடாக என் மேல் விழும்
வெப்பக் காற்றை
குளிர்ச்சியான உன் பேச்சு
சமன் செய்து கொண்டிருந்தது

தூரத்து மணல் மேட்டில்
சிறுவர்கள் குதிப்பதாய்
கடல் நீர் மௌனத்தை
உடைத்துக்கொன்டிருந்தார்கள்

உன் கண்களும்-அந்தக்
கடலைப்போலவே
ஆழமாய்...அழகாய்...

எனக்கும் குதிக்க ஆசைதான்
என்ன செய்வது?
அவர்களைப் போல் எனக்கு
ஆழம் தெரியாதே...