Monday, November 28, 2005

சூட்சுமம் தேடல்

எறும்புகளின் சுவடுகள் போல
உலகெங்கும் நிறைந்திருக்கின்றன
மனிதர்களின் காதல்கள்

பிரபஞ்சத்தின் சிறுதுளி வெளிச்சத்தில்
கீற்றாய் ஒளிர்கிறது
காலத்தின் நமட்டுச் சிரிப்போடு சிங்கப்பல்

வெளி எல்லைகள் மறந்து
மிகப்பெரியதென நாம் கருதும்
மனிதக்கூட்டங்களில்
எல்லோருக்கும் பிடித்ததென கர்வப்பட்டதொரு
கவிதையை முன் வைத்தேன்...
ஒருவர் கூட புரட்டி பார்க்கவில்லை

3 comments:

Thats Secret said...

testing comment

Thats Secret said...

jkjhj

supersubra said...

பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எல்லா நிகழ்ச்சிகளையும் கவனிக்கும் இறைவன் போல் நானும் தமிழ் மணத்தின் ஒவ்வொரு உயிரின் எண்ணகூவல்களையும் கவனித்து சுவைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.