Saturday, November 12, 2005

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்

எல்லோருக்கும் வணக்கம்

இன்னைக்கு பேப்பர்ல படிச்சேன் சிவகாசி படத்துக்கு கோர்ட்ல கேஸ்ன்னு
இது ஒரு அட்டு படம் அம்பது ரூபா வேஸ்ட் பண்ணிட்டானுகன்னு கேஸ் போட்டிருந்தா பரவால்லன்னு விட்டுருப்பேன்
"ப்ளாட்பார வக்கீல்"னு ஒரு டயலாக் படத்துல வருதாம் வக்கீல கேவலப்படுத்திட்டாய்ங்கடான்னு கேஸ்
நல்ல வேள நம்மூராளுக இன்டர்நேஷனல் லெவலுக்கு போவுல
ஏன்னா இங்க சர்தார் ஜோக் மாதிரி அங்க வக்கீல் ஜோக் ரொம்ப பிரபலம் (புக்கே இருக்கு)

இந்த மாதிரி சினிமா மேல கேஸ் போடறது அதிகமாக ரெண்டு காரணம் தான்
மக்களுக்கு சென்சிட்டிவிடி உணர்ச்சி வசப்படறது அதிகமாய்டிச்சி
அல்லது
ச்சீப் பப்ளிசிட்டி தேட்ற மனோபாவம் அதிகமாய்டிச்சி

நேத்து ப்ராஜெக்ட் கடைசி நாள் (அதனால தான் ப்லாக் எழுதலை) சுமார் 8 மணி டீம் லீடர் வந்து முடிச்சிட்டு
கெளம்பலாம்னான்.வடிவேலு மாதிரி "ஏன்டா அடிச்சது ரெண்டு மணி நேரம் ரெஸ்ட் ஒன் அவரா?" ங்கிற மாதிரி
பாத்தேன்...அவன் முறைச்சிட்டே போய்ட்டான்.ஓரளவு எல்லாம் முடிஞ்சதும் ஒரு ஃபோன் கால் "உடனே கெளம்பி வாடா தீர்த்தத்திருவிழா"ன்னு
பழைய படத்துல வர்ற கடவுள்கள் மாதிரி விஷ்க்னு மறைஞ்சேன்

சபை 'கலகலகல'ன்னு கூடுச்சு.ஊறுகாயில இருந்து தட்டுவட வரைக்கும் இருந்தது
சியர்ஸ் அடிக்கும்போது "ஏண்டா இதெல்லாம் பண்றோம்"னான் ஒர்த்தன்
நாஞ்சொன்னேன் "அடேய்...தண்ணியடிக்கும்போது கண்ணு பாத்து சந்தோஷப்பட்டுக்குது நாக்கு ருசிச்சும்,
மூக்கு நுகர்ந்தும் சந்தோஷப்பட்டுக்குது ஆனா இந்த காதுக்கு ஒண்ணுமே கெடைக்காது அத குஷி பண்ண தான்
'சியர்ஸ்னு சொல்றொம்'"னேன்
இன்னொருத்தன் சொன்னான் "அதெல்லாம் இல்லடா அளவு சரியா இருக்கான்னு பாத்துக்கத்தான்"ன்னு
உங்கள திருத்தவே முடியாதுடான்னு சியர்ஸ் சொன்னேன்

இன்றைய கவிதை

என்ன ஆட்டம் ஆடிருப்ப?
-------------------
அடிக்கடி சொல்லுவாரு எம் மாமன்
துடிவயசுல ரொம்ப ஆடாதடா - அப்புறம்
பொட்டப் புள்ள பொறக்கு மின்னு
எட்டும் பொண்ணுங்க அவருக்கு



நட்புடன்
கோகுல் குமார்

No comments: