Saturday, November 05, 2005

இந்தியாவுலயே நெ.1 பணக்காரனாக ஆசையா?

எல்லோருக்கும் வணக்கம்

வேலை விட்டதும் பக்கத்துலயே "அபிராமி"ல "மஜா" ஓடிச்சு பூந்துட்டேன்
பசுபதி காமெடி கலக்கல்ப்பா
என்ன...இந்த மசாலா படத்துல எல்லாம் ஹீரோயின் பாட்டுக்கு மட்டும் ஆட வர்ற மாதிரி இங்க விக்ரம் சண்டை போட வர்றார்

(விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்)
அப்புறம் நேத்து தான் சிவகாசி படத்தை பார்த்து தொலைச்சேன்
டைரக்டருக்கு "பில்ட்-அப்" கொடுத்த ஒரே படம் இதுவாத்தான் இருக்கும்
கஷ்ட காலம் இந்த படத்தையும் நூறு நாள் ஓட்டுவாய்ங்க

உஙளுக்கு இந்தியாவுலயே நெ.1 பணக்காரனாக ஆசையா?
ரொம்ப எளிது ஒரு லட்சத்துக்குள்ள எல்லா செலவையும் அடக்கி
நிகர விலை ஒரு லட்சம்னு ஒரு பிளான் கொண்டுவந்தா
பைக் வாங்கறவங்கள்ள 30% - 40% பேர் காருக்கு மாறுவாங்களாம்
நீங்க நெ.1 ஆக அதுவே போதுமாம்

அதே மாதிரி உலகத்துலயே நெ.1 ஆக...?
1.எய்ட்சுக்கு மருந்து கண்டு பிடிங்க (யார் கண்டா நோபல் பரிசு கூட கிடைக்கலாம்)
2.புத்தகங்கள போட்டொகாபி பண்றத தடுக்க வழி கன்டுபிடிங்க
3.சாஃப்ட்வேர்,புதுப்படம் இதெல்லாம் திருட்டு பண்றத தடுங்க (இத மட்டும் செஞ்சிட்டா பில் கேட்சை மிந்திடலாம்)

ஒரு பொண்ணு எழுதற மாதிரி கவிதைகள் எழுத எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அது கொஞ்சம் சவாலான விஷயம் இன்னும் முழுசா கைக்கு வந்திடலைனாலும்...
இன்றைய கவிதையும் அப்படித்தான்

முகவரி மறக்கப்பட்டதொரு பாடலோடே
இதயத்தை அதிர்வுக்குள்ளாக்கும்...
ஏன் எதற்கென்றே தெரியாமல் ஆரம்பித்து
அவசரமாக முடிக்கப்பட்டதொரு பழைய காதலின் சொச்சம்

கதறுதலுமில்லாது உதறுதலுமியலாது
உறுத்தும் வலி மாற்றப்படும்...
தற்காலிகமாக வேறு சேனலுக்கு

குடும்பமே அதிசயமாய்ப் பார்த்த
குட்டியைத் தாடையால் கவ்வி
அரவணைத்துப் போய்க்கொண்டிருந்த
அம்மிருகத்தைப் பார்க்கையில் தோன்றியது...
"அது நான் தானோ"


சரி... திங்கள் சந்திப்போம்
உடம்பு மனசு எல்லாதையும் நல்லா பாத்துக்கிடுங்க
நட்புடன்
கோகுல்

1 comment:

ஏஜண்ட் NJ said...

//நன்றி ஞான பீடம்
நீங்கள் தான் இந்த Blog-ன் முதல் விமர்சகர்
விமர்சனமே ஒரு கவிதை போலிருக்கிறது
//

Thanks!

//... சிவகாசி ... டைரக்டருக்கு "பில்ட்-அப்" கொடுத்த ஒரே படம் இதுவாத்தான் இருக்கும்//

:-)))

********