Tuesday, April 18, 2006

தொலை நோக்கு பார்வை-ஜாலி பேட்டி

சரத் குமார் அதிமுகவில் இணந்த கையோடு அளித்த பேட்டி (கொஞ்சம் கற்பனை கலந்து) :

"திமுகவிலிருந்து விலகிய காரணம்?

அங்கே குடும்ப அரசியல் நடக்கிறது மற்றும் அவருக்கு தொலை நோக்கு பார்வை இல்லை.

தொலை நோக்கு பார்வை இல்லை என எப்படி சொல்கிறீர்கள்?

நேற்று சேப்பாக்கத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஒரு குழந்தைக்கு பேர் வைக்க சொல்லி இருந்தார்கள் அவர் கோமள வல்லி என மனசாட்சியே இல்லாமல் பெயர் வைத்திருக்கிறார்.இப்போதே இந்தப்பெயர் படு ஓல்டு பேஷன் இன்னும் இருபது வருடங்கள் கழித்து அந்த பெண் குழந்தை தன் தந்தையிடம் "ஏம்ப்பா நேக்கு இந்த பேர் வச்சேள்?" என்று அபிதா ரேஞ்சுக்கு அழும் என நினைத்துப் பார்த்தாரா? இதிலிருந்தே தெரியவில்லையா அவருக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என? இவ்வாறு தெரிவித்தார். மற்றும் அருகிலிருந்த ஜெ. இடை மறித்து "கருணாநிதி கிட்டப்பார்வை இருப்பதால் கண்ணாடி அணிந்திருக்கும்போது தொலை நோக்கு பார்வை எப்படி இருக்கும்?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடியாக கருணாநிதி அளித்த பேட்டி:

உங்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என சரத் கூறியிருக்கிறாரே?

"சினிமாவில் இறங்கிய காலம் முதலே மன்னாதி மன்னனில் எம்ஜிஆருக்கு இடுப்புக்கு கீழே இழையோடும் இலைகள் போன்ற பேஷனை யோசனை செய்தவன் நான் என்பது வரலாறு.
கோமள வல்லி என்பது இருபது வருடம் கழித்து பேஷனாகும் என்ற தயாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்கியே அப்பெயர் சூட்டப்பட்டது அவர்களது கொக்கரிப்புக்கு காலம் பதில் சொல்லும் என்பதை அறிந்து கொள் கழகக்கண்மணியே"
அருகில் தயாநிதி இடைமறித்து,"கிட்டப்பார்வை இருப்பவர்களால் தூரத்தில் தான் பார்க்க முடியாதே தவிர தொலை நோக்கு என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இது கூட தெரியாதவர் தான் ஆட்சியில் இருக்கிறார் மற்றும் (வழக்கம் போல) இத்தனி நபர் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மான நஷ்ட வழக்கு போடப்படும்" என பயமுறுத்...சே பதில் சொன்னார்.

No comments: