Thursday, April 13, 2006

நோயாளியிடம் எப்படி பேச வேண்டும்

முந்தாநாள் அம்மா திடீரென வயிறு வலிக்கிறது என்று சொல்ல டாக்டரைப் பார்க்க அடுத்த 20 நிமிடங்களில் பெட்டில் சேர்த்து குளூகோஸ் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.அம்மாவுக்கு கிட்னீ ஸ்டோன்,நான் பொறுமையாக சிறு நீரகக்கல்லின் எல்லா விவரங்களையும் சொல்லி அம்மாவின் டென்ஷனை குறைத்துக் கொண்டிருந்தேன்.ஏற்கனவே என் நண்பன் ஒருவனுக்கு இப்பிரச்னை இருந்ததால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு எனக்கு (கடவுள் புண்ணியத்தில்) இருந்தது.அவனுக்கு இவ்வளவு சின்ன வயதில் வந்ததற்கு காரணம் ஹாட்டை ராவாக மிகக்குறைந்த நேரத்தில் அடித்துக்காட்டும் சாதனையை பலமுறை நிகழ்த்தியது தான்.இப்போது அதைத் தொட்டால் போதைக்கு முன்னால் எமன் வருவான் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருப்பதால் டாஸ்மாக் அவனுக்கு எதிர்ச்சொல்.

ஸ்கேன் செய்ய அங்கிருந்த லேப் போனோம் ரிப்போர்ட்டை சோதித்த டாக்டர் பெண் கேட்ட முதல் கேள்வி, "எப்டி இவ்ளோ நாள் இருந்தீங்க?" அடப்பாவிகளா ஏற்கனவே அவதில இருக்கிற நோயாளி கிட்ட இப்டியா பேசறது...முறைத்தேன் கேள்வியின் விபரீதம் புரிந்தவராய் "அதாவது...இவ்ளோ பெரிய கல் இருக்கே பிரச்னைன்னு டாக்டர்கிட்ட வராம எப்டி இவ்ளோ நாள் இருந்தீங்க இவ்ளோ நாள் ஏன் வரலைன்னு கேட்டேன்" என்றார்.அம்மா சற்றே ரிலாக்ஸ் ஆனார்.அதற்குள் சொந்தக்காரர்கள் வந்து விட்டார்கள், அம்மாவை அப்போது தான் தூங்க வைத்திருந்தோம் கொஞ்ச நேரம் காத்திருந்த அத்தை அதற்கு மேல் தாங்காது என்று ,"ஏ புள்ள எழுந்திரு" என்றார் ஆஹா எல்லாமே கடுப்படிக்கிறார்களே ஸாரிம்மா உனக்கு பயங்கர கெட்ட நேரம் தான் என நினைத்துக்கொண்டேன் பேச்சு வாக்கில் அத்தை சொன்னார்,"இதே மாதிரி தான் தம்பி ரெண்டு மாசம் மின்னாடி எங்க மாமனார சேத்திருந்தோம் வயித்து வலின்னு இதே ஆஸ்பித்திரில தான் ஏதேதோ பண்ணாங்க ம்ச் காப்பாத்த முடியல" அம்மா என்னை பாவமாக பார்த்தார் "அதெல்லாம் ஏன் அத்தை இப்போ பேசிக்கிட்டு?"என்றேன். "ஆமால்ல, பேச்சு வாக்கில சொல்லிட்டேனப்பா" இதே ரீதியில் மூன்று உறவினர்கள் பீதியை கிளப்பி விட்டார்கள். நோயாளியிடம் என்ன பேச வேண்டும் என்பதே பலருக்கு தெரியவில்லை என்பது ஆச்சர்யமூட்டும்(?!@!) வேதனை.

3 comments:

Sivabalan said...

A good blog.

This must be happened to many people in their life.

This has to be changed.

Badri Seshadri said...

உண்மைதான்! இதுபோன்ற நேரங்களில் உறவினர்கள் யாருமே அருகில் இல்லையானால் நிம்மதியாக இருக்கும்!

Sivabalan said...

// உண்மைதான்! இதுபோன்ற நேரங்களில் உறவினர்கள் யாருமே அருகில் இல்லையானால் நிம்மதியாக இருக்கும் //

I do agree. But the patient some time wants to see some his/her best.

But we cannot restrict only the best to come and see.

It is very very difficult situation. But one has to go thro this.