Thursday, February 23, 2006

ரஜினியின் அடுத்த மூவ் ||

விஜயகாந்த் ஏற்கனவே வந்தாயிற்று அரசியலுக்கு. திராவிட கட்சிகளுக்கு மாற்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிற தருணத்தில் “எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்” என்ற திறமையான வாதத்தை முன் வைக்கிறார்.ஆனால் அதைத் தவிர எதையும் பேச பயப்படுகிறார்.சில நேரங்களில் "பறவைக்காய்ச்சல் புரளி" என்று வித்தியாசமான பேட்டி கொடுப்பது சுப்ரமணிய சுவாமியை நினைவூட்டுகிறது.இரு திராவிட கட்சிகளின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி லட்டு மாதிரி மக்கள் மனதை அள்ள வேண்டிய நேரத்தில் தயங்கி தயங்கி வம்புக்கு இழுப்பது எதுவும் வேலைக்கு ஆகாது.ஆக இன்னும் ஐந்து வருடங்களில் ஒன்று விஜய காந்த் அரசியல் கற்றுக்கொள்வார் அல்லது ஒதுங்கி விடுவார்.கருணாநிதியும் ஓய்வு பெறும் நேரம் வந்து விடும்,திமுகவிலும் சரி அதிமுகவிலும் சரி அடுத்த கட்ட தலைவர்கள் உருவாக்கப்படவில்லை அல்லது உருவாக்கப்படுபவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.

ஆக நேரம் கூடி வருகிறது என்பார்களே அப்படி ஒரு வாய்ப்பு ரஜினிக்கு அடுத்த ஐந்து வருடங்களில் நிகழலாம்.இமேஜை திரும்ப கொண்டு வர ஐந்து வருடங்கள் என்பது அளவுக்கு அதிக நேரம், நினைத்ததை விட அதிகமாகவே செய்யலாம்.அது மட்டுமன்றி ரஜினி என்றாலே கட்சிகள் எடுக்கும் முதல் பிரச்னை காவிரி நீர் தான் அதை சமாளிக்கவும் கடந்த காலத்தில் இதே பிரச்னையால் மக்களிடம் தனக்குள்ள கெட்ட பெயரை நீக்கவும் ரஜினி முயற்சிக்கலாம்.ஏன் திரும்ப ஒரு முறை அரசியல்வாதிகள் ரஜினியை வம்புக்கு இழுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதையே தனக்கு சாதகமாக மாற்றி அதிரடியாக ரஜினி பிரவேசிக்கலாம் அல்லது எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தது போல வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்கலாம்.

சமீப காலமாக ரஜினி இவ்வளவு சீக்கிரம் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டதில்லை சிவாஜி மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக? சந்திரமுகி வெற்றி ரஜினிக்கு முழு திருப்தி அளிக்காததாக இருக்கலாம். காரணம் அதன் வெற்றி ரஜினியால் மட்டுமே வரவில்லை.அந்தக்கதையின் பலமே ஜோதிகா கேரக்டர் தான். நூறாவது நாள் விழாவில் ஜோதிகா கலந்து கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக பத்திரிக்கைகளில் விமர்சிக்கப்பட்டதை நினைவில் கொள்க.ரஜினியின் இப்போதைய மிக முக்கிய நிலைப்பாடு பழைய இமேஜுக்கு வருவது அதற்கு வரப்போகும் வருடங்கள் சாட்சியாக அமையலாம்.

1 comment:

Karthi Permanathan said...

I don't think rajini is intrested in politics any more.