Thursday, May 25, 2006

நகம் வளர்த்தேன் நான் நகம் வளர்த்தேன்

கல்லூரியில் படித்த போது அப்படியொரு நீளமான நகம் வளர்த்திருந்தேன்.காரணம் ச்சும்மா தோணுச்சு வளர்த்தினேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை just to impress others வேறென்ன? அதிலும் குறிப்பாக சில கூடப்படிக்கும் பெண்களை.மற்றும் பலரும் பலவிதமான காரணங்களை சொன்னாலும் கடைசியாக மற்றவர்களை கவருவதில் தான் வந்து நிற்கும்.இப்படி கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே மிக நீளமான நகம் வளர்த்தவர் இப்படி வளர்த்தால் விரல்கள் செயலிழந்து விடும் எனத்தெரிந்தும் வளர்த்தேன் என்று சொன்னதாக படித்த போது வேறென்ன தோன்றும்?

உண்மையில் இதற்கு பலனுண்டு, நிஜமாகவே நிறைய பேரை நம் பக்கம் கவனிக்க வைக்க ஒற்றைத்தோடு, முன் தலை கலரிங், கறுப்பு band ஆகியவை உதவும் அதுவும் நம்மையுமறியாமல் நாம் எதிர்பார்க்காதவர்கள் கூட கவனிப்பார்கள்.அப்படித்தான் என் ஹிட்லிஸ்ட்டில் இருந்த பெண்கள் கவனித்தார்களோ இல்லையோ ஹெச் ஓ டி கவனித்தார்.அப்படியே அப்பாவிடம் போட்டுக்கொடுத்தார்.

ஒரே ஒரு தேவைக்காக இம்மாதிரி அசவுகரியங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருப்பது தான் கொடுமை.அதிலும் அம்மாவிலிருந்து யாரென்றே தெரியாத பயணி வரை, “ஏன்ப்பா இப்படி வளர்க்கிறே?” என்பார்கள் ஏதோ சாதனைப்பயணத்தை விசாரிப்பது போல. இப்படித்தான் பக்கத்து வீட்டு சிறுமி கேட்க “அதுவா என்னை யாராவது தொணதொணன்னு கேள்வி கேட்டா கோபம் வந்து அவங்க கன்னத்துல ஒரு கீறு கீறிடுவேன்” என்றேன் முகத்தில் கொஜ்சமும் சலனமின்றி .அதற்கப்புறமும் அவள் என்னிடம் பேசினாள் கொஞ்சம் தள்ளி நின்றே.

உண்மையிலேயே கீறல்கள் விழாமல் இருக்காது அதுவும் கூட இருப்பவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.அதாவது கபடி,நீச்சல் ஆகியவற்றில் முக்கியமாக, முக்கியமின்றி இன்னபிற.தான் பாதிக்கப்படுவதென்றால் நல்ல தூக்கத்தில் கொசுக்கடி மற்றும் மிக அரிதாக சாப்பாட்டு இலையை கவனிக்காமல் கழுவும்போது.அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது அடுத்த முக்கிய வேலை.சிலர் இதை செய்ய சோம்பேறித்தனப்பட்டு நெயில் பாலிஷ் போடுவதும் உண்டு.

சினிமாக்களில் ஹீரோ யாரும் வைத்திருந்தார்களா நான் பார்த்ததில்லை.ஆனால் நிச்சயம் நீள நகம் வளர்ப்பது தவறு.காரணம் என் நீள நகத்தின் சோக மற்றும் பயங்கரமான முடிவு தான்.மெல்லிய பலகீன இதயமுள்ளவர்கள் முடிவை படிக்க வேண்டாம்.

பேருந்தில் புட்போர்டு போடுவது சிலபஸ்ஸில் இல்லாத கடமை.அப்படி கடைசியாக கல்லூரி ஸ்டாப்பிங்கில் குதித்த போது தான் சுளீர்ரென்று ஒரு வலி தண்டுவடம் தாண்டி வேகமாக மூளைக்கு செய்தி அனுப்பியது.கண்கள் திருப்பினால் பாதி நகம் பழைய அலுமினிய கடைசி ஜன்னலில் சிக்கி கிழிந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.கத்த நேரமில்லை பஸ்ஸை எடுத்து விட்டார்கள் இன்னமும் பாதி நகம் தான் வலித்தாலும் பரவாயில்லை என்று வேகமாக இழுக்க நான் நினைத்தபடியே அப்படியே நக முனை நோக்கி கிழிந்து கையை விடுவித்தேன்.

ஆகவே ஆபத்துகள் நாம் அறியாத திசையிலிருந்து தான் வரும் என்பதை மனதில் கொண்டு நகம் வளர்ப்பவர்கள் யோசிக்கவும்

2 comments:

Unknown said...

நானும் ஒரு அனுபவத்த எழுதிருக்கேன் வந்து பாருங்க
http://kilumathur.blogspot.com

Unknown said...

நானும் ஒரு அனுபவத்த எழுதிருக்கேன் வந்து பாருங்க
http://kilumathur.blogspot.com
http://mahendhiran.blogspot.com
http://paarima.blogspot.com
http://inthavaaram.blogspot.com