Tuesday, May 09, 2006

செல்வி சீரியல் நிறுத்தாதற்கு காரணம்?

நேத்தோட தேர்தல் ஜீரம் முடிஞ்சிடிச்சி ஆனா நேத்து அம்மா சொன்ன விஷயம் இது... அந்தம்மா இல்ல எங்கம்மா தலைவா.அதாவது சரத்குமார் ராதிகாவோட அதிமுகவில சேர்ந்ததுக்கப்புறமும் செல்வி சீரியல் நிறுத்தப்படலை, ஏன்னு யோசிச்சு பாத்தா நிறைய அரசியல் தந்திரங்கள் இருக்குன்னு புரியும்.அதாவது அந்த சீரியல் தான் தாய்க்குலங்கள் அதிகம் பார்க்கிறது
பொசுக்குன்னு நிறுத்திப்புட்டா அதுவே ஒரு வகை அனுதாப அலையா மாறியிருக்கவும் வாய்ப்பிருந்தது, அப்டி எதுவும் ஆகிடக்கூடாதுங்கிறது ஒரு காரணம்.

அடுத்து நிறைய திமுக ஓட்டு கேக்குற விளம்பரங்கள் மறைமுக நேரடி பிரச்சார விளம்பரங்கள் அந்த நிகழ்ச்சி நடுவில ஒளிபரப்பப்பட்டது. எதிர்க்கட்சியா இருந்தாலும் அதிமுகவாலயோ ராதிகாவாலயோ இத தடுக்க முடியல.தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் தான் எந்த மாற்றமா இருந்தாலும் நடக்கும், சும்மாவா சொன்னாங்க தமிழ் நாட்டு சாணக்கியர்னு.

No comments: