இன்றைய தினமலரில் ( புதுச்சேரி இதழ் இரண்டாம் பக்கம்) சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு ஆதரவாக பேசிய பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவை கண்டித்து ஜார்கண்ட் மாநில கல்லூரி மாணவிகள் வளையல், சேலை போன்றவற்றை அனுப்பி வைக்கப் போவதாக கூறி, தன்பாத் நகரில் நேற்று போராட்டம் நடத்தியாக புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள்.
அதில் போஸ் கொடுக்கும் விதமாக பெண்கள் பெருமையாக சேலை, வளையல் எல்லாம் வைத்திருந்தார்கள். சிரிப்பு சிரிப்பாக வந்தது. போராடுவதன் நோக்கம் நல்ல விஷயம் தான். போராடிய விதம் தான் சகிக்கவில்லை.
வளையல், சேலை அனுப்பி வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? சின்கா கோழை என்றா? பெண்கள் கோழைகளா?
யார் இந்த யோசனையை கொடுத்ததோ... பாவம்... பெண் புத்தி பின் புத்தி என்கிற மூட நம்பிக்கையை நிரூபிக்காதீர்கள்.
அப்புறம் பழைய விகடனை புரட்டினேன் (March 12, 2008), ஹாய் மதனில் ஒரு கேள்வி "புத்திசாலி கூட தோற்கும் இடம் எது?" அதற்கு மதனின் பதில், "பெண்ணிடம் மட்டுமே". ஹாய் மதன் எனக்கு பிடித்தமான பகுதி. இக்கேள்வி ஒரு பாலினத்தை மட்டுமே குறிக்கவேயில்லை. ஆனால் ஏன் பதிலில் ஆண்கள் மட்டுமே புத்திசாலி என்கிற பாவம் வந்ததென்று தெரியவில்லை.
பி.கு: நான் இல்லை. இயல்பாக தோன்றிய கேள்விகள் இவை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நண்பர் காசியின்
"மேதாவி மதனின் ஆணாதிக்க மனப்பான்மைக்குக் கண்டனம்!":
பார்க்கவும்
Post a Comment