Tuesday, January 16, 2007

வலைப்பதிவு Commercialization... எப்போது?

இப்போதைய நிலவரம் ஏதும் தெரியாது, வேறு யாரேனும் சமீபத்தில் இது பற்றியே எழுதியிருந்தாலோ, Adsense எல்லாம் rubbish என்றிருந்தாலோ நான் பொறுப்பல்ல‌.


சமீபத்தில் பொங்கலன்று வலைப்பதிவர் கூட்டம் நாமக்கல்லில் நிகழ்ந்தது. நாமக்கல் சிபியும் நானும் மட்டுமே, அவர் ரெண்டு பேர் சந்திச்சாலும் கூட்டம் தானேன்னதால அப்டி சொல வேண்டிதாப்போச்சு. ஹி ஹி...





முதல்ல நான் யாரு இங்க புதுசான்னு கேக்கறவங்களுக்கு... கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஆறு மாசமா இங்க 'active user' ஆ இருந்தேன். எனக்கு மேற்படிப்புக்கு போக வேண்டிய நிலைமையால சில காலம் வர முடியாம போச்சு.இப்ப சிபிய மீட் பண்ணவும் திரும்பவும் எப்பிடியிருக்குன்னு எட்டிப் பார்க்க வந்தேன்.முடிந்தவரை (நீங்கள் பரவாயில்ல கஷ்டப்பட வேண்டாம்னாலும்) எழுத முயற்சிக்கிறேன்.





ஆறு மாதம் பெரிய மாற்றம் வலைப்பதிவில் நிகழ்ந்திருப்பதாய் தோன்றவில்லை... ஒருவேளை நான் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது.ப்ளாக்கர் சில தொல்லைகளிலிருந்து விடுதலை தந்திருக்கிறது.புதுத் தொல்லைகள் இருக்கிறதா என்று பழகினால் தெரிந்து விடும்.நான் எதிர்பார்த்த மாற்றம் வியாபார மயமாக்கல். வலைப்பதிவில் வெளிநாடுகளில் முழுநேரத்தொலிலாகவே செய்யும்போது நாம் பாக்கெட் மணியாவது சம்பாதிக்க முடியுமா (தமிழில் வெளியிட்டால்) என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. கூகிள் இப்போது தான் சோதனை முயற்சியாக தமிழ் விளம்பரங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கிறது. வெற்றியடைந்தால் வேட்டை தான்...





Sorry தமிழ் Adword பார்த்தேன் ஆனால் screenshot எடுக்கவில்லை

Friday, July 28, 2006

அனைவருக்கும் வணக்கம்

கோகுல் என்கிற (சில நாட்கள் காணாமல் போயிருந்த) தொல்லை திரும்பவும் வந்து விட்டது.தமிழ்மணத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது போல... வாழ்த்துக்கள்

நட்சத்திர வாரத்தில் எழுத முடியாது போய் விட்டது அதை விட முக்கியம் அதை சொல்லாமல் கூட விட்ட என்னுடைய அநாகரிகம்.நிர்வாகிகள் மன்னிக்கவும்.

இருப்பினும் என்னை மன்னித்து விட்டார்கள் நன்றிகள் பல. நிர்வாகவியல் (MBA) படிப்பில் சில பல எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் இருப்பினும் ஓரளவு செட்டிலாகி விட்டேன்.நாமக்கல் சிபியிடம் மட்டும் எழுத முடியாமைக்கு புலம்பினேன்...எதிர் முனை தொலைபேசியில் (ரொம்ப சந்தோஷத்துடன்...?!) படிப்பு தான் முக்கியம் என குறுந்தகவல்(SMS) அனுப்பினார்.


தினமும் கணிணி முன் உட்கார நேரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது, எனினும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு மாதமேனும் ஆகலாம் எனவே பூக்காடு மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.

நாளை முதல் மீண்டும் சந்திப்போம்...980980

Categories:

Friday, June 30, 2006

விஜயகாந்த் - நடிகர் சங்கத்தலைவர்?

விஜயகாந்த் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டவர்களின் நம்பிக்கை, நாசர் எதிர்ப்பு, அவர் வெற்றி பெற்ற தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள்...

என் கேள்வியெல்லாம் அவர் வென்றால் அது செல்லுமா? ஏற்கனவே ஜெயா பச்சன் இது போன்ற பதவி வகித்ததற்கு தானே ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிக்கக்கூடாதென உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அதிலும் பணம் வந்தால் மட்டுமல்ல புகழ் வந்தாலும் கூட அது ஆதாயம் தரும் பதவி தான் என்று தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டு விட்ட நிலையில் விஜயகாந்த் நிற்பது அர்த்தமற்றது இல்லையா?

அப்படியானால் விஜயகாந்த் எந்தப்பதவியை ராஜினாமா செய்வார்? எதை ராஜினாமா செய்தாலும் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமே.

ஆனால் யாருமே இதுவரை இப்பிரச்னையை இக்கோணத்தில் எடுக்காததற்கு காரணம் இரு பக்கம் கூர்மையான கத்தி என்பது தான்.ஏற்கனவே அகில இந்திய அளவில் இப்பிரச்னை ஒரு சுற்று வந்து விட்ட நிலையில் தமிழகத்திலும் இப்படி ஆரம்பித்தால் ஒவ்வொரு கட்சியிலும் மற்ற கட்சிகள் ஆராய்ச்சியில் இறங்கி பலரை பதவியிறக்க இப்போதே ஆமையாக இயங்கும் நீதி மன்றங்களில் வழக்குகள் போட்டு இன்னும் கொஞ்சம் மந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம்.

அப்படி நிகழ்ந்தால் விஜயகாந்த்திற்கு புகழ் நிச்சயம் கிடைக்கும்,அரசியல் களமும் சூடாகும். பத்திரிக்கைகளுக்கும் நல்ல தீனி தான்.மக்கள் அதாவது நாம்... வேடிக்கை பார்க்க வேண்டியது தான் வழக்கம் போல.

Categories: ,