Friday, July 28, 2006

அனைவருக்கும் வணக்கம்

கோகுல் என்கிற (சில நாட்கள் காணாமல் போயிருந்த) தொல்லை திரும்பவும் வந்து விட்டது.தமிழ்மணத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது போல... வாழ்த்துக்கள்

நட்சத்திர வாரத்தில் எழுத முடியாது போய் விட்டது அதை விட முக்கியம் அதை சொல்லாமல் கூட விட்ட என்னுடைய அநாகரிகம்.நிர்வாகிகள் மன்னிக்கவும்.

இருப்பினும் என்னை மன்னித்து விட்டார்கள் நன்றிகள் பல. நிர்வாகவியல் (MBA) படிப்பில் சில பல எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் இருப்பினும் ஓரளவு செட்டிலாகி விட்டேன்.நாமக்கல் சிபியிடம் மட்டும் எழுத முடியாமைக்கு புலம்பினேன்...எதிர் முனை தொலைபேசியில் (ரொம்ப சந்தோஷத்துடன்...?!) படிப்பு தான் முக்கியம் என குறுந்தகவல்(SMS) அனுப்பினார்.


தினமும் கணிணி முன் உட்கார நேரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது, எனினும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு மாதமேனும் ஆகலாம் எனவே பூக்காடு மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.

நாளை முதல் மீண்டும் சந்திப்போம்...980980

Categories:

Friday, June 30, 2006

விஜயகாந்த் - நடிகர் சங்கத்தலைவர்?

விஜயகாந்த் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டவர்களின் நம்பிக்கை, நாசர் எதிர்ப்பு, அவர் வெற்றி பெற்ற தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள்...

என் கேள்வியெல்லாம் அவர் வென்றால் அது செல்லுமா? ஏற்கனவே ஜெயா பச்சன் இது போன்ற பதவி வகித்ததற்கு தானே ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிக்கக்கூடாதென உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அதிலும் பணம் வந்தால் மட்டுமல்ல புகழ் வந்தாலும் கூட அது ஆதாயம் தரும் பதவி தான் என்று தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டு விட்ட நிலையில் விஜயகாந்த் நிற்பது அர்த்தமற்றது இல்லையா?

அப்படியானால் விஜயகாந்த் எந்தப்பதவியை ராஜினாமா செய்வார்? எதை ராஜினாமா செய்தாலும் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமே.

ஆனால் யாருமே இதுவரை இப்பிரச்னையை இக்கோணத்தில் எடுக்காததற்கு காரணம் இரு பக்கம் கூர்மையான கத்தி என்பது தான்.ஏற்கனவே அகில இந்திய அளவில் இப்பிரச்னை ஒரு சுற்று வந்து விட்ட நிலையில் தமிழகத்திலும் இப்படி ஆரம்பித்தால் ஒவ்வொரு கட்சியிலும் மற்ற கட்சிகள் ஆராய்ச்சியில் இறங்கி பலரை பதவியிறக்க இப்போதே ஆமையாக இயங்கும் நீதி மன்றங்களில் வழக்குகள் போட்டு இன்னும் கொஞ்சம் மந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம்.

அப்படி நிகழ்ந்தால் விஜயகாந்த்திற்கு புகழ் நிச்சயம் கிடைக்கும்,அரசியல் களமும் சூடாகும். பத்திரிக்கைகளுக்கும் நல்ல தீனி தான்.மக்கள் அதாவது நாம்... வேடிக்கை பார்க்க வேண்டியது தான் வழக்கம் போல.

Categories: ,

Sunday, June 25, 2006

சிக்குன் குனியாவால் ஸாரீஈஈஈஈஈ

சிலபல நாட்கள் தொல்லையில்லாமல் இருந்த நண்பர்களுக்கு வணக்கம்.சுமார் பத்து நாட்களாக சிக்குன் குனியா நாமக்கல் சேலம் பகுதிகளில் பாடாய் படுத்துவது அனைவரும் அறிந்ததே, இந்நேரம் பார்த்து எனக்கும் காய்ச்சல் வர எழுத இயலாமல் போய் விட்டது.முன்பே எழுத உட்கார்ந்தேன் அப்போது தான் தமிழ்மணம் விற்பனைக்கு என்கிற அதிர்ச்சி தகவலை பார்க்க நேரிட்டது.ஏனோ சோகம் மனம் கவ்வ எழுதும் மூட் போய் விட்டது.

அதுவும் நாமக்கல் சிபி போனில் தொடர்பு கொண்டு பேசிய அன்று தான் கடைசி நாள் எழுதியது என்று ஞாபகம்.அவருடன் பேசிய நிமிடங்கள் தான் செல்பேசியில் (ஒத்த பாலின மனிதருடன்) அதிக நேரம் பேசியவை, சுவாரசியமாக பேச்சு நீண்டது.தெரிந்தவர்களை தாண்டி இப்படி பேசுவது இப்படி அரிதாகவே நிகழ்கிறது.

ஆனால் வளர்சிதை மாற்றம் போட்டியில் தான் கலந்து கொள்ள முடியவில்லை,கவிதை எல்லாம் யோசித்து வைத்திருந்தேன்.ம்ச்ச்

இன்று முதல் வழக்கம் போல் தினமும் எழுத உறுதி தர இயலாது ஆயினும் Updates இருக்கும் ;)

Categories: