Thursday, March 09, 2006

டென்ஷன் டென்ஷன் டென்ஷன்


இன்று காலையில் வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். நூறடி ரோடு அம்மன் கோவில் அருகே ஒரு வற்றாத ஜீவ குட்டை உண்டு.என் கெட்ட நேரம் ஏதோ சிந்தனையோடு ரோடு தாண்ட அங்கே நிற்க கடன் கேட்டவன் துரத்துவது மாதிரி வெறி பிடித்த வேங்கையாக தேங்கிய தண்ணீரை தெறிக்க விட்டு பறந்தான் ஒரு பஸ் ட்ரைவர்.உடனே முகுளமோ தண்டுவடமோ செயல்பட சட்டென்று திரும்பி நின்றேன். நல்ல வேளையாக முதுகு வரை சேறு எகிறவில்லை, கெட்ட வேளையாக முழங்காலுக்கு கீழே பேண்ட் நாஸ்தி.எனக்கு ‘சுர்’ரென்று கோபம் ஏறியது.எவ்வளவு அழகான காலைப் பொழுது, இப்படி டென்ஷன் ஏற்றி விட்டானே, சரி அவனுக்கு என்ன டென்ஷனோ வீட்டில் மனைவி திட்டோ, வேலை பிடிக்கவில்லையோ அப்படியானால் ஒரு வேளை அவனுடைய டென்ஷனை நான் வாங்கிக் கொண்டேனோ ஆமாம் ஒரு வகையில் உண்மை தானே ஆஹா காலையில் நிதானமாக இருந்தால் எவ்வளவு தத்துவங்கள் கொட்டுகின்றன? ஆகவே எதற்காக மற்றவர்களின் டென்ஷன்களை நாம் வாங்கி கஷ்டப்பட வேண்டும் அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும், நம்முடைய டென்ஷனை மட்டும் நாம் வைத்துக்கொள்வோம்.

இன்னொரு தொல்லை ஆரம்பம்

சில நாட்கள் ஆப்ஸென்ட் ஆனதற்கு மன்னிக்கவும்.இனிய தளம் என்று இன்னொரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறேன் (’அய்யய்யோ’ கேட்கிறது).என்ன செய்ய? பூக்காடு மொழி பெயர்ப்பு தளம் ஆகிவிட்டதோ என்கிற மாதிரி வரிசையாக சில பதிப்புகள், மற்ற நல்ல ஆங்கில தளங்களின் கருத்துகளை எழுதியிருந்தேன்.தினமும் நிறைய புது தளங்களை பார்ப்பதால் அதை சொல்ல வேண்டும் என்ற வேட்கை எழுவது இயற்கையே எனினும் பூக்காட்டில் சொந்தமாக ஏதாவது யோசித்து எழுதுவோமே என்று இணையத்தில் என்னைக் கவர்ந்தவற்றை இங்கே தொகுக்கிறேன்.

Wednesday, March 01, 2006

பழமொழிகளை அனுபவிக்கணும்

சிறு வயதில் பட்டி மன்றங்கள் அதிகம் பார்ப்பேன், அதில் பெரும்பாலும் தமிழ் பற்றி அவர்கள் சொல்லும் உவமைகள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.அதே போல் பழமொழிகளுக்கு புது விளக்கம் அளிப்பார்கள். உதாரணத்திற்கு “பந்திக்கு முந்து படைக்கு பிந்து” என்பதற்கு கேள்விப்பட்ட புது விளக்கம் நம் கை சாப்பிடும்போது முன்னால் வரும் அது தான் பந்திக்கு முந்து, அதே போல் போரில் ஈட்டியை எறியும்போது கை பின்னால் போகும் இது தான் படைக்குப் பிந்து என்பது அதாவது கை பின்னால் போகிறது என்பது என்று கேள்விப்பட்டேன். இதே மாதிரி “சட்டியில் இருந்தா ஆப்பைக்கு வரும்” சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் அகப்பை (கருப்பை) யில் கரு வரும் என்பதே உண்மையான பொருள் என்று சொன்னார்கள்.இதெல்லாம் தான் உண்மையா இல்லை சில பலரின் கிரியேட்டிவிடியா ஒன்றும் புரியவில்லை.கமல் ஒரு படத்தில் சொன்னது போல் பழமொழிகளை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.