tag:blogger.com,1999:blog-63472262024-03-07T11:06:03.725-08:00பூக்காடுதோணுறத சொல்றேன்Unknownnoreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-6347226.post-23306702278054277632008-05-14T04:04:00.000-07:002008-05-14T04:34:49.080-07:00குருவி விமர்சனம்<img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://img208.imageshack.us/img208/5083/kuru2pt1.jpg" alt="" border="0" /><br /><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal"><span style="line-height: 115%;font-size:100%;" >காதல் காட்சிகளுக்கு French Kiss, கதைக்கு Blood Diamond அப்புறம் கொஞ்சம் Bourne Ultimatum, சில பல தெலுங்கு தமிழ் படங்கள் சேர்த்தால் குருவி மசாலா. இயக்குனர் ஷங்கருக்கு அடுத்து பேரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் தரணி. தைரியமாக முதல் நாளே போயிருப்பேன், “இனி அடுத்த விஜய் யாரென்று தான் போட்டியிருக்கும்” என்கிற இயக்குனர் பேட்டி விகடனில் படித்தது ஞாபகம் இருந்தது. அதான் தள்ளிப் போட்டேன். <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span style="line-height: 115%;font-size:100%;" >விவேக் மட்டும் கொஞ்சம் ஆறுதல். ஆனாலும் இரட்டை அர்த்த வசனங்கள். த்ரிஷா எப்படியாவது பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் போதும் விட்ட market ஐ பிடித்து விடலாம் என்கிற Strategy ஐ மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லை அப்படி யோசனை தருபவரை மாற்றிக் கொள்ள வேண்டும். விஜய் நடிப்பில் மிதப்பு தூக்கல். முதல் காட்சியிலிருந்து கடைசி வரை. நடனம் அருமை, ஆனால் பாடல்கள் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span style="line-height: 115%;font-size:100%;" >வில்லன்ஸ் கஷ்டம்... இதுக்கு மேலே எழுதவும் ஒண்ணுமில்ல. ஆந்திரா ஊறுகாய் தொட்டுக்க தான், முழு சாப்பாடாக சாப்பிட சொல்கிறார்கள், 50 ரூபாய்க்கு. முடியலீங்ணா.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span style="line-height: 115%;"><span style="font-size:100%;">பி.கு: இந்த படத்திற்கு 30 மார்க்கை தாண்டி மதிப்பிடும் பத்திரிக்கைகளை படிப்பது உங்கள் உடல், மன </span><span style="font-size:100%;"> </span><span style="font-size:100%;">நலத்திற்கு தீங்கானது.</span><o:p></o:p></span></p><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6347226.post-63111177211835349612008-03-14T17:42:00.000-07:002008-03-14T17:46:10.257-07:00அமெரிக்க பொருளாதாரம் பலவீனம் - புஷ் ஒப்புதல்இந்திய கணிணி நுட்ப நிறுவனங்களுக்கு இது கொஞ்சம் இல்லை ரொம்பவே கவலையளிக்கிற செய்தி தான். ஏற்கனவே வேலை குறைப்பு, சம்பள குறைப்பு என பல வழிகளில் ஐ.டி நிறுவனங்கள் ஈடு கட்டிக் கொண்டிருந்தன. கடைசியில் வேறு வழியில்லை, அமெரிக்க பொருளாதாரம் கடினமான நிலையை சந்திக்கிறது என்று புஷ் <a href="http://news.yahoo.com/s/ap/20080314/ap_on_go_pr_wh/bush/" target="_blank">ஒப்புதல் பேட்டி</a> அளித்துள்ளார்.<br /><br />ஏற்கனவே ஒபாமா, தான் பதவிக்கு வந்தால் Outsourcing ஐ குறைப்பதாக உறுதி அளித்திருப்பதும், அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஹிலாரியும் அதே வாக்குறுதியை கொடுத்திருப்பதும் நினைவிருக்கலாம்.<br /><br />சடசடவென ஐ.டி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்குவதை விட புதிய உத்திகள் (Strategies) பற்றி யோசித்தால் தொலை நோக்கு அணுகுமுறையாக இருக்கும். E.U லிருந்து கூட இந்தியாவோடு இத்துறையில் வியாபாரத்தை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பெரிய நிறுவனங்கள் நேரடியாக ஐ.டி மென்பொருட்களை தயாரிப்பது சிறந்த அணுகுமுறையாக இருக்கும். இதன் மூலம் உலக சந்தையில் ஏற்கனவே இந்தியாவிற்கு இருக்கும் பெயரை சிறக்க செய்யலாம்.<br /><br />மற்றும் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் நம் நாட்டிற்கான ஐ.டி தேவையை பூர்த்தி செய்ய முயலலாம். எவ்வளவு நாள் தான் ஒரு கண்டத்தையும், Outsourcing என்கிற ஒரே ஒரு அணுகுமுறையையுமே நம்பப் போகிறோம்?<br /><br />பி.கு: ஹ்ம்ம்.. அதுவும் நான் ஒரு ஐ.டி நிறுவனத்தில் சேரப்போகும் நேரத்தில் தானா நிகழ வேண்டும்? ஆம் நண்பர்களே, எனக்கு Caritor எனும் நிறுவனத்தில் Business Analyst ஆக Campus Interviewல் வேலை கிடைத்திருக்கிறது, இன்னும் மூன்று வாரங்களில் சேர வேண்டியிருக்கும், சென்னையா, பெங்களூருவா என தெரியவில்லை.<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6347226.post-1646595613311001782008-03-12T00:53:00.000-07:002008-03-12T00:58:48.516-07:00மூட நம்பிக்கையை மாற்றுங்கள்இன்றைய தினமலரில் ( புதுச்சேரி இதழ் இரண்டாம் பக்கம்) சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு ஆதரவாக பேசிய பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவை கண்டித்து ஜார்கண்ட் மாநில கல்லூரி மாணவிகள் வளையல், சேலை போன்றவற்றை அனுப்பி வைக்கப் போவதாக கூறி, தன்பாத் நகரில் நேற்று போராட்டம் நடத்தியாக புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள்.<br /><br />அதில் போஸ் கொடுக்கும் விதமாக பெண்கள் பெருமையாக சேலை, வளையல் எல்லாம் வைத்திருந்தார்கள். சிரிப்பு சிரிப்பாக வந்தது. போராடுவதன் நோக்கம் நல்ல விஷயம் தான். போராடிய விதம் தான் சகிக்கவில்லை.<br /><br />வளையல், சேலை அனுப்பி வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? சின்கா கோழை என்றா? பெண்கள் கோழைகளா?<br /><br />யார் இந்த யோசனையை கொடுத்ததோ... பாவம்... பெண் புத்தி பின் புத்தி என்கிற மூட நம்பிக்கையை நிரூபிக்காதீர்கள்.<br /><br />அப்புறம் பழைய விகடனை புரட்டினேன் (March 12, 2008), ஹாய் மதனில் ஒரு கேள்வி "புத்திசாலி கூட தோற்கும் இடம் எது?" அதற்கு மதனின் பதில், "பெண்ணிடம் மட்டுமே". ஹாய் மதன் எனக்கு பிடித்தமான பகுதி. இக்கேள்வி ஒரு பாலினத்தை மட்டுமே குறிக்கவேயில்லை. ஆனால் ஏன் பதிலில் ஆண்கள் மட்டுமே புத்திசாலி என்கிற பாவம் வந்ததென்று தெரியவில்லை.<br /><br />பி.கு: நான் இல்லை. இயல்பாக தோன்றிய கேள்விகள் இவை.<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6347226.post-60939319474583733812007-01-16T02:32:00.000-08:002008-12-10T23:26:39.384-08:00வலைப்பதிவு Commercialization... எப்போது?இப்போதைய நிலவரம் ஏதும் தெரியாது, வேறு யாரேனும் சமீபத்தில் இது பற்றியே எழுதியிருந்தாலோ, Adsense எல்லாம் rubbish என்றிருந்தாலோ நான் பொறுப்பல்ல.<br /><br /><br /><span class="technoratitag">சமீபத்தில் பொங்கலன்று வலைப்பதிவர் கூட்டம் நாமக்கல்லில் நிகழ்ந்தது. நாமக்கல் சிபியும் நானும் மட்டுமே, அவர் ரெண்டு பேர் சந்திச்சாலும் கூட்டம் தானேன்னதால அப்டி சொல வேண்டிதாப்போச்சு. ஹி ஹி...</span><br /><br /><br /><span class="technoratitag"></span><br /><br /><br /><span class="technoratitag">முதல்ல நான் யாரு இங்க புதுசான்னு கேக்கறவங்களுக்கு... கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஆறு மாசமா இங்க 'active user' ஆ இருந்தேன். எனக்கு மேற்படிப்புக்கு போக வேண்டிய நிலைமையால சில காலம் வர முடியாம போச்சு.இப்ப சிபிய மீட் பண்ணவும் திரும்பவும் எப்பிடியிருக்குன்னு எட்டிப் பார்க்க வந்தேன்.முடிந்தவரை (நீங்கள் பரவாயில்ல கஷ்டப்பட வேண்டாம்னாலும்) எழுத முயற்சிக்கிறேன்.</span><br /><br /><br /><span class="technoratitag"></span><br /><br /><br /><span class="technoratitag">ஆறு மாதம் பெரிய மாற்றம் வலைப்பதிவில் நிகழ்ந்திருப்பதாய் <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtFcQp1V0x3uB4nS8XWM_CcTlszCEKdoOIvKJAst0ze9FSAm3-179Og25fW2jEZI2Q-e9xqln9JxYwolSohM2d5czGNCFeKmj8Lo89ttbQ29Y2bA06kQtfYzg7WCHqTfbVeaeASQ/s1600-h/multilangadswh4.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5020577891694370818" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtFcQp1V0x3uB4nS8XWM_CcTlszCEKdoOIvKJAst0ze9FSAm3-179Og25fW2jEZI2Q-e9xqln9JxYwolSohM2d5czGNCFeKmj8Lo89ttbQ29Y2bA06kQtfYzg7WCHqTfbVeaeASQ/s200/multilangadswh4.gif" border="0" /></a>தோன்றவில்லை... ஒருவேளை நான் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது.ப்ளாக்கர் சில தொல்லைகளிலிருந்து விடுதலை தந்திருக்கிறது.புதுத் தொல்லைகள் இருக்கிறதா என்று பழகினால் தெரிந்து விடும்.நான் எதிர்பார்த்த மாற்றம் வியாபார மயமாக்கல். வலைப்பதிவில் வெளிநாடுகளில் முழுநேரத்தொலிலாகவே செய்யும்போது நாம் பாக்கெட் மணியாவது சம்பாதிக்க முடியுமா (தமிழில் வெளியிட்டால்) என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. கூகிள் இப்போது தான் சோதனை முயற்சியாக தமிழ் விளம்பரங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கிறது. வெற்றியடைந்தால் வேட்டை தான்...</span><br /><br /><br /><span class="technoratitag"></span><br /><br /><br />Sorry தமிழ் Adword பார்த்தேன் ஆனால் screenshot எடுக்கவில்லை<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6347226.post-1154100313350552992006-07-28T08:21:00.000-07:002006-07-28T08:36:41.790-07:00அனைவருக்கும் வணக்கம்கோகுல் என்கிற (சில நாட்கள் காணாமல் போயிருந்த) தொல்லை திரும்பவும் வந்து விட்டது.தமிழ்மணத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது போல... வாழ்த்துக்கள்<br /><br />நட்சத்திர வாரத்தில் எழுத முடியாது போய் விட்டது அதை விட முக்கியம் அதை சொல்லாமல் கூட விட்ட என்னுடைய அநாகரிகம்.நிர்வாகிகள் மன்னிக்கவும்.<br /><br />இருப்பினும் என்னை மன்னித்து விட்டார்கள் நன்றிகள் பல. நிர்வாகவியல் (MBA) படிப்பில் சில பல எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் இருப்பினும் ஓரளவு செட்டிலாகி விட்டேன்.நாமக்கல் சிபியிடம் மட்டும் எழுத முடியாமைக்கு புலம்பினேன்...எதிர் முனை தொலைபேசியில் (ரொம்ப சந்தோஷத்துடன்...?!) படிப்பு தான் முக்கியம் என குறுந்தகவல்(SMS) அனுப்பினார்.<br /><br /><br />தினமும் கணிணி முன் உட்கார நேரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது, எனினும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு மாதமேனும் ஆகலாம் எனவே பூக்காடு மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.<br /><br />நாளை முதல் மீண்டும் சந்திப்போம்...980980<br /><br /><span class="technoratitag">Categories: <a href="http://del.icio.us/graphixhero/local" rel="tag">local</a></span><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6347226.post-1151655007204957562006-06-30T00:40:00.000-07:002006-06-30T07:20:52.233-07:00விஜயகாந்த் - நடிகர் சங்கத்தலைவர்?விஜயகாந்த் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டவர்களின் நம்பிக்கை, நாசர் எதிர்ப்பு, அவர் வெற்றி பெற்ற தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள்...<br /><br />என் கேள்வியெல்லாம் அவர் வென்றால் அது செல்லுமா? ஏற்கனவே ஜெயா பச்சன் இது போன்ற பதவி வகித்ததற்கு தானே ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிக்கக்கூடாதென உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.<br /><br />அதிலும் பணம் வந்தால் மட்டுமல்ல புகழ் வந்தாலும் கூட அது ஆதாயம் தரும் பதவி தான் என்று தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டு விட்ட நிலையில் விஜயகாந்த் நிற்பது அர்த்தமற்றது இல்லையா?<br /><br />அப்படியானால் விஜயகாந்த் எந்தப்பதவியை ராஜினாமா செய்வார்? எதை ராஜினாமா செய்தாலும் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமே.<br /><br />ஆனால் யாருமே இதுவரை இப்பிரச்னையை இக்கோணத்தில் எடுக்காததற்கு காரணம் இரு பக்கம் கூர்மையான கத்தி என்பது தான்.ஏற்கனவே அகில இந்திய அளவில் இப்பிரச்னை ஒரு சுற்று வந்து விட்ட நிலையில் தமிழகத்திலும் இப்படி ஆரம்பித்தால் ஒவ்வொரு கட்சியிலும் மற்ற கட்சிகள் ஆராய்ச்சியில் இறங்கி பலரை பதவியிறக்க இப்போதே ஆமையாக இயங்கும் நீதி மன்றங்களில் வழக்குகள் போட்டு இன்னும் கொஞ்சம் மந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம்.<br /><br />அப்படி நிகழ்ந்தால் விஜயகாந்த்திற்கு புகழ் நிச்சயம் கிடைக்கும்,அரசியல் களமும் சூடாகும். பத்திரிக்கைகளுக்கும் நல்ல தீனி தான்.மக்கள் அதாவது நாம்... வேடிக்கை பார்க்க வேண்டியது தான் வழக்கம் போல.<br /><br /><span class="technoratitag">Categories: <a href="http://del.icio.us/graphixhero/india'n" rel="tag">india'n</a>,<a href="http://del.icio.us/graphixhero/politician" rel="tag">politician</a></span><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6347226.post-1151239518663066892006-06-25T04:30:00.000-07:002006-06-25T05:45:18.763-07:00சிக்குன் குனியாவால் ஸாரீஈஈஈஈஈசிலபல நாட்கள் தொல்லையில்லாமல் இருந்த நண்பர்களுக்கு வணக்கம்.சுமார் பத்து நாட்களாக சிக்குன் குனியா நாமக்கல் சேலம் பகுதிகளில் பாடாய் படுத்துவது அனைவரும் அறிந்ததே, இந்நேரம் பார்த்து எனக்கும் காய்ச்சல் வர எழுத இயலாமல் போய் விட்டது.முன்பே எழுத உட்கார்ந்தேன் அப்போது தான் தமிழ்மணம் விற்பனைக்கு என்கிற அதிர்ச்சி தகவலை பார்க்க நேரிட்டது.ஏனோ சோகம் மனம் கவ்வ எழுதும் மூட் போய் விட்டது.<br /><br />அதுவும் நாமக்கல் சிபி போனில் தொடர்பு கொண்டு பேசிய அன்று தான் கடைசி நாள் எழுதியது என்று ஞாபகம்.அவருடன் பேசிய நிமிடங்கள் தான் செல்பேசியில் (ஒத்த பாலின மனிதருடன்) அதிக நேரம் பேசியவை, சுவாரசியமாக பேச்சு நீண்டது.தெரிந்தவர்களை தாண்டி இப்படி பேசுவது இப்படி அரிதாகவே நிகழ்கிறது.<br /><br />ஆனால் வளர்சிதை மாற்றம் போட்டியில் தான் கலந்து கொள்ள முடியவில்லை,கவிதை எல்லாம் யோசித்து வைத்திருந்தேன்.ம்ச்ச்<br /><br />இன்று முதல் வழக்கம் போல் தினமும் எழுத உறுதி தர இயலாது ஆயினும் Updates இருக்கும் ;) <br /><br /><span class="technoratitag">Categories: <a href="http://del.icio.us/graphixhero/sorry" rel="tag">sorry</a></span><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6347226.post-1150284909966701762006-06-14T04:19:00.000-07:002006-06-16T10:02:33.920-07:00புட்பாலா கிரிக்கெட்டாஎங்க பாத்தாலும் புட்பால் பத்தியே பேச்சு,இன்னைக்கு பேப்பர்ல வயசான பாட்டி செத்துட்டதா டாக்டர்ஸ் சொன்னதுக்கப்புறம் திடீர்னு பாட்டி எந்திரிச்சு "ஜெர்மனி இன்னைக்கு விளையாடுதா?"ன்னு கேட்டிருக்கு.அதில்லாம இந்த தடவ ஜெர்மனி உலகக்கோப்பை வாங்கறத பாக்க தான் அவங்க உயிரோட இருக்கறதா பேட்டி வேற.<br /><br />நமக்கு புட்பால் பாய்ஸ் ஸ்கூல்ல அறிமுகமாச்சு.நூறு பசங்கள பி.டி பீரியட்ல ஒரே ஒரு புட்பால குடுத்து ஓட்றா ராசான்னு அனுப்பிடுவாங்க கோச்சிங்லாம் ஒண்ணுமில்ல,பெப்பென்னு ஒரு கூட்டம் பந்த சுத்தி ஓடும், இன்னும் கொஞ்சம் குழுக்கள் அங்கங்க நின்னு பேசிக்கிட்டிருக்கும் அப்டியே பந்து வந்ததும் படார்னு கேம்க்குள்ள இறங்கி நாலு தள்ளு தள்ளிட்டு திரும்ப வந்து எங்கனயாச்சும் நின்னு பேச ஆரம்பிக்கும்.அது கோல்பாஸ்ட் இல்ல கோல் போஸ்ட்னு இப்ப தான் தெரியும் (ஆமா தானே?)அதில்லாம கிரிக்கெட் விளையாடக்கூடாது புட்பால் தான் விளையாடணும்னு ரூல் போட்டதும் தான் கொள்ள பேரு கிரிக்கெட் விளையாடவே ஆரம்பிச்சோம்.அதென்ன இது விளையாடக்கூடாது அது விளையாடக்கூடாதுன்னு சொல்றது...அப்டின்னு.<br /><br />பாத்தா புட் பால் விளையாட அதிக உபகரணம் தேவையில்ல கிரிக்கெட் விளையாட என்னென்னமோ தேவ அப்டிம்பாங்க நாம தான் மரத்த ஸ்டெம்பாவும்,கிளைய பேட்டாவும் மாத்துற கேடிகளாச்சே அப்றமென்ன?<br /><br />சரி எல்லோரும் சொல்றாங்களே,புட் பாலையும் பாப்போம்னு நேத்து பாத்தேன்,செக் நாடும் டோகோன்னு (?!) ஒரு நாடும் விளையாடிச்சு.நல்லா தான் போச்சு மஞ்ச சட்ட நாடு பாவமா இருந்ததால அது ஜெயிக்கணும்னு பாத்தேன்.கோல்போஸ்ட் பக்கத்துல நம்மாளு அடிக்கிற நேரம் வந்து சிவப்பு சட்ட ஒருத்தன் கெட்டியா பிடிச்சுக்கிட்டான் பா.அத அம்பயரு(வேற ஏதும் சொல்வீங்களோ தெர்ல) கண்டுக்கவே இல்ல,இதே மாதிரி சிவப்பு சட்ட பண்ண மஞ்ச சட்டயும் ஆரம்பிச்சிட்டானுவ. அடப்பாவிகளா ஏதோ சில தடவ கறுப்பு சட்ட அம்பயரு தடுத்தாரு அப்புறம் போங்கடா வெளக்கெண்ணங்கிற மாதிரி தேமேன்னு விட்டுட்டாரு போல.<br /><br />கிரிக்கெட் ஜெண்டில்மேன் விளையாட்டண்ணே வார்த்த விளையாட்டு இருக்குமே தவிர ஆளப்பிடிக்கிற கோக்கு மாக்கு வேல நடந்தது... அம்புட்டுதேன் கத.ஸ்டீவ் வாக் , இன்சமாம் பந்த தடுத்ததுக்கு அவுட் குடுத்தது நல்ல உதாரணம்.<br /><br />ஆனாலும் ஒவ்வொரு விளையாட்டும் முன்னேறணும் அதுக்கு அதயெல்லாம் பாக்கணும்தான்...முயற்சி செய்(வோம்)யறேன்.<br /><br /><span class="technoratitag">Categories: <a href="http://del.icio.us/graphixhero/sport" rel="tag">sport</a></span><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6347226.post-1150027830641658402006-06-11T04:35:00.000-07:002006-06-13T09:55:43.700-07:00பெண்ணியம் போல் இது ஆணியம்நான் அவ்வப்போது பெண்கள் மலர்,குடும்ப மலர் மாதிரி பத்திரிக்கைகளை படிப்பதுண்டு.பெண்கள் சமைக்க மட்டுந்தானா (அதிரடியாக வேறு வார்த்தை போட்டும் கேட்டிருந்தார்கள்) என்று முதல் பக்கத்திலும், நூல்கோல் சூப் வைப்பது எப்படி என்று கடைசி பக்கத்திலும் கோலம், வீட்டுக் குறிப்புகள்,ஆண் வர்க்கத்தை திட்டி ஒரு சிறுகதை என்று ஏகப்பட்ட வெரைட்டி கிடைக்கும்.<br /><br />ஏனென்றே தெரியவில்லை பெண்களின் உலகம் அதாவது பெண்களின் மீடியா உலகம் ஆண்களை திட்டுவதாகவே அமைந்துள்ளது.எந்த பெண்கள் பத்திரிக்கையிலாவது ஆண்களின் படம்,அவர்களை பற்றிய குறிப்பு,மாதவன் என்ன ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார் என்றெல்லாம் இருக்கிறதா? இதே ஆண்கள் (சரி அப்படி எதும் இந்தியாவில் இல்லை/எனக்குத் தெரியவில்லை) அல்லது ஆண்கள் அதிகம் வாங்கும் பத்திரிக்கையை பாருங்கள்.சானியாவில் இருந்து நமீதா வரை எல்லா தகவலும் இருக்கும்,<br /><br />ஓகே சீரியஸ்... என்ன சொல்ல வந்தேன் என்றால் நேற்று செல்வி தொடரில் கடைசி காட்சி பார்த்தேன் (ந்ண் எப்போதும் பத்து மணிக்கு மேல் தான் வீட்டிற்கு போவது...சீரியல்களை தவிர்க்க,ஆனாலும் நேற்று சீக்கிரம் போய் விட்டேன்) ராதிகா வில்லனை பார்த்து சில டயலாக்குகள் பேசி விட்டு கடைசியில் ஒருவரை ஒரு தள்ளு, இன்னொருவரை ஒட்சே ஒரு அடி ஆஹா...எனக்கு ஏனோ இது அந்நியமாகவே பட்டது,பெண்களை பற்றிய பழைய அபிப்ராயமோ என்னவோ...பெண்கள் அதிகம் பார்க்கும் சீரியலில் பெண் போராடுவது,சண்டை போடுவது எல்லாம் சகஜம் தான் ஆனால் ஆண்களை திட்டுவது,ஆண்களை அடிப்பது ஏன் என்று தான் கேட்கிறேன்.<br /><br />ஆண்கள் அதிகம் டாமினேட் செய்யுமிடமென சினிமாவை எடுத்துக் கொண்டால் அங்கே கூட ஆண்கள் ஆண்களுடன் தானே போராடுகிறார்கள் (சில அரிதான நிகழ்வுகளை தவிர்த்து).<br /><br />அதே போல பெண்கள் விளம்பரங்களில் கேவலமாக சித்தரிக்கப் படுகிறார்கள் என்று போராட்டங்கள் நடத்துகிறார்கள்.அதே செல்வி தொடரின் இடைவேளையில் விளம்பரம் ஒன்று போடப்பட்டது, "இவரை நான் பத்து ரூபா கொடுத்து வாங்கினேன்" என்கிறார் ஒரு அழகி, பதறிப்போய் பார்த்தால் ஒரு பியூட்டி சோப் வாங்கினாராம் அந்த ஈ அழகனை அதற்காக 10 ரூபாய்க்கு வாங்கியதாக சொல்கிறார்.புற அழகை பார்த்து மயங்குவது சரியா தவறா என்கிற வாதம் வேண்டாம் (ஏனென்றால் ஆண்கள் பக்கம் வாதாடி நான் தோற்று விடுவேன்).அதென்ன பத்து ரூபாயில் ஆண்களை கேவலப்படுத்துவது, அசின் வரும் ஒரு கிரீம் விளம்பரத்திலும் இதே போலத்தான் கறுப்பாக இருக்கும்போது வேண்டாம் என ஒதுக்கும் ஆண் அசின் இக்கிரீம் பூசி அழகானதும் ஓடிப்போய் கெஞ்சுகிறார்.ஆண்களின் குணாதிசயம் தானே என்கிறீர்களா அப்படியானால் பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் கண்டு கொள்ளாமல் விடுங்கள் பெண்களின் குணாதிசயம் அப்படியென்று.<br /><br />அறியப்படுபவை (இவற்றில் ஒன்றோ பலவோ உண்மையாக இருக்கலாம்)<br />1.ஆண்கள் கேவலமானவர்கள் , பெண்கள் உண்மை பேசுபவர்கள்<br />2.ஆண்கள் கேவலமானவர்கள், சகிப்புத்தன்மை உடையவர்கள்<br />3.ஆண்கள் கேவலமானவர்கள், உப்பு போடாதவர்கள்<br />(இத்தோடு நிறுத்திக் கொண்டால் இப்பதிவு பெண்கள் இதழுக்கு போய் விடும்)<br />4.பெண்கள் ஆண்களை திட்ட முடியவில்லை திட்டுவதை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்<br />5.4வது சொன்னது உண்மை என்று மீடியா நினைக்கிறது<br />6.பெண்கள் குறைகளை பெரிது படுத்துபவர்கள்<br /><br />எப்படியாயினும் முடிவு ஒன்றே ஒன்று தான் இனி ஸ்ட்ரிக்டாக பத்து மணிக்கு முன்னால் வீட்டுக்கு போகக்கூடாது.<br /><br /><span class="technoratitag">Categories: <a href="http://del.icio.us/graphixhero/women" rel="tag">women</a></span><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6347226.post-1149773299521890592006-06-08T05:20:00.000-07:002006-06-08T06:34:36.860-07:00ஏழை என்பதில் என்ன பெருமை"ஒவ்வொரு தடவை உணவுக்கும்<br />உயிர் விடுமளவுக்கு துணியும் நீ சாமுராய்<br />ஏழையிடம் மட்டுமே வீரம் காட்டுவதால்<br />நீயும் ஒரு போலீஸ்காரன்"<br /><br />என்று கொசுவைப்பற்றி எழுத நினைத்தபோது எனக்கும் கூட ஏழை என்பது பெருமையான ஒரு பட்டம் போலத் தான் தோன்றியது. அண்ணா ஒருமுறை சொன்னாராம்,"இந்தியா ஏழை நாடல்ல ஏழைகள் வாழும் நாடு" (அண்ணாவா, நேருவா?).சினிமா ஹீரோக்களும்,அரசியல்வாதிகளும் சேர்ந்து ஏழை என்பது ஒரு சந்தோஷப்பட வேண்டிய பாக்கியம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டார்கள்.<br /><br />பணம் படைத்தவன் தவறான வழிகளில் மட்டுமே அந்நிலைக்கு வரமுடியும் என்பது போலவும்,இரவில் தூக்கம் வராமல் மாத்திரைகளை நம்புவது போலவும் நாம் உளவியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம்.ஏழையாக கட்டாந்தரையில் படுத்தால் சுகமான தூக்கம் கொஞ்சும்,பஞ்சு மெத்தையில் படுத்தாலும் பணக்காரனுக்கு நிம்மதி இருக்காது இன்னும் என்னென்னவோ.<br /><br />பணக்காரன் என்பவன் புத்திசாலி,எல்லோரும் ராஜ பரம்பரையில் பணக்காரர்களாகவே பிறப்பதில்லை, ஏழையாக இருந்து சரியான வழியில் நேரத்தை திட்டமிட்டு செலவழித்து கஷ்டப்பட்டே பணக்காரராகிறார்கள்.அப்படியே பிறக்கும்போதே பணக்காரராக பிறந்திருப்பினும் வெற்றியை தக்க வைப்பதை விட பெரிய சாதனை உண்டா?<br /><br />நம்மாளு மிக சாதாரணமாக பொய் சொல்வான் அதுவும் ஆயிரம் பொய் அவன் அப்பவே நல்லா படிச்சான் என்று ஆரம்பித்து கல்யாணம் பண்ணின யோகம்யா என்பது வரை.ஏழையாக இருப்பது கேவலம் நம் சோம்பேறித்தனத்திற்கும், சரியான வழியில் முயற்சி செய்யாமல் இருப்பதற்கும் கிடைக்கிற தண்டனை என்பதும் நம் மக்களால் உணரப்படுவதே இல்லை என்பது கசப்பான உண்மை.<br /><br />நாம் வேலை உருவாக்கும் படிப்பு எதுவோ அதற்கு முக்கியத்துவம் தருவதை விட வேலை கிடைக்கிற படிப்பு எதுவோ அதை தேடிப்போவதில் தான் ஆர்வம் காட்டுகிறோம்.வட மாநில மக்கள் கூட பொறியியல் படிப்புகளை விட நிர்வாக படிப்புகளுக்கு (MBA) முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அங்கே தங்கி விட்ட என் நண்பன் கூறுவான்.<br /><br />ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதார உயர்வு மட்டும் நிகழ்ந்தால் போதும் அரசியல்வாதியில் ஆரம்பித்து நாட்டின் ஒவ்வொரு அரசாங்கத் துறையும் விழிக்கும்.ஏழையாக இருப்பதில் மமதை கொள்ளும் மனோபாவத்தில் இருந்து வெளி வருவோம்.கலாம் விரும்பிய இந்தியா 2020க்கு முன்பே கிடைக்கும்.<br /><br /><span class="technoratitag">Categories: <a href="http://del.icio.us/graphixhero/india'n" rel="tag">india'n</a>,<a href="http://del.icio.us/graphixhero/responsible" rel="tag">responsible</a></span><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6347226.post-1149690316322491532006-06-07T06:16:00.000-07:002006-06-07T16:40:59.956-07:00இணையம்,டேட்டிங்,பணம்முதல் முதலாக பத்தாம் வகுப்பு படித்தபோது இணையம் எனக்கு அறிமுகமானது.study in canada என்கிற விளம்பரத்தை பார்த்து விட்டு தட்டுத்தடுமாறி அறுபது ரூபாய் சேர்த்து இணைய மையம் வந்தேன்.ஏசி, அமைதியான இடத்தில் மெல்லிய இசை, ரெண்டே வார்த்தை பதில்கள் எனக்கு இது நம்மூர் தானா என்ற குழப்பத்தை உண்டாக்கின.தள முகவரி அடிக்க வேண்டிய இடத்தில் பொறுமையாக அடித்து வைக்க page cant be displayed காட்டியது.இன்னும் பொறுமையாக திரும்ப அடித்தேன் திரும்ப அதே...சுமார் அரை மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு ஜெயிக்கவில்லை...ஓனரைக் கூப்பிட்டேன்.அவர் இதுக்கு பேர் email id இது போட்டா ஒண்ணும் வராது இதப்போடணும் என்று அதில் இருக்கும் முகவரியை அடித்தார், வந்தது.அவர் போனதும் அதை close செய்தேன்.நானே திரும்ப இன்னொரு விண்டோ திறந்து studyincanada.comக்காக s என அழுத்தியதும் அவ்வெழுத்தில் ஆரம்பிக்கும் முன்பே பார்க்கப்பட்ட தள முகவரிகள் காட்டப்பட்டன.ஏகப்பட்ட முகவரிகள் எல்லாமே sex என ஆரம்பித்தன, தலையில் இரு கொம்புகள் முளைத்தன<br /><br />நண்பர்களிடம் பகிர்ந்தேன்... அவ்வளவு தான் ஒரு சிஸ்டத்திற்கு நான்கைந்து பேர் படையெடுப்போம் அப்போது தானே அறுபது ரூபாயும் ஷேர் ஆகும் அப்புறம் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் போல மூன்று மாதங்களுக்கு மேல் எனக்கே உவ்வே ஆனது.இணையத்தின் மற்ற பக்கங்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்,இப்போது வரை ஆச்சர்யம் யாரிடமும் நான் எதையும் கேட்கவேயில்லை மின்னஞ்சல் எப்படி வேலை செய்கிறது என்பதில் ஆரம்பித்து இணையம் இயங்குவது வரை இணையமே எனக்கு கற்றுத் தந்தது.<br /><br />அடுத்து நேரம் அதிகம் வீணானது இணையத்திலிருக்கும் டேட்டிங் தளங்களால் தான்.இணையத்தில் நான் புரிந்து கொண்ட முதல் பாடம் "இது அமெரிக்கர்களுக்கானது".இணையத்தில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி பெற அதிக வாய்ப்பு நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் தான்.டேட்டிங்கில் ஆரம்பித்து ஆன்லைன் வர்த்தகம் வரை இந்தியாவில் ஒர்க் அவுட்டாக வாய்ப்புகள் மிகக்குறைவு.<br /><br />காரணம் இந்தியர்கள் "touch & feel" நம்பிக்கை உடையவர்கள்.தொட்டுப் பார்க்காமல் எதையும் வாங்க மாட்டோம்.அமெரிக்கர்களைப் போல ஒரு டிஜிட்டல் இமேஜைப் பார்த்து பொருளை நம்பி வாங்க மாட்டோம் வாங்கவும் முடியாது.தவறு இரு பக்கமும் தான்.கஸ்டமர் கேர் அவ்வளவு மோசமாக இங்கே உள்ளது.இப்போது நிறைய கம்பெனிகள் வந்திருந்தாலும் இந்திய ஆன்லைன் வர்த்தக கம்பெனிகள் இதை இன்னமும் கூட புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.தான் ஏமாற்ற மாட்டோம் என்ற நம்பிக்கையை இந்தியாவில் ஒரு முறை உருவாக்கி விட்டால் பலமான அஸ்திவாரம் அமைத்து விடலாம்.<br /><br />நான் சொல்ல வந்தது இதுவல்ல, இப்போதாவது உருப்படியாக மீதி நேரத்தை வலைப்பூக்கள் பதிப்பதில் செலவு செய்கிறேன் முன்பெல்லாம் டேட்டிங் தளங்களை பார்ப்பதும் ஆன்லைன் நண்பர்களை (ஹானஸ்ட்லி இருபாலினமும் தான்)சேர்ப்பதும் மட்டுமே வேலை.ஆணோ,பெண்ணோ சந்தித்ததில்லை.சில சமயங்களில் என்னால் சில சமயங்களில் அவர்களால்.முக்கிய காரணம் இணைய வலை எப்படிப்பட்ட ஆளாகவும்,புரிதல் உடையவராகவும் பழகி இருப்பினும் பார்க்காதவராக இருந்தால் நம்பிக்கையின்மையோடான ஒரு பயத்தை உருவாக்கி விடுகிறது.சமீப காலங்களில் வலைப்பதிவர் சந்திப்புகளில் எனக்கு முதலில் ஆச்சர்யமும் பின்பு ஆர்வமும் ஏற்பட்டது.ஆனால் நான் அச்சமயங்களில் எல்லாம் மிஸ் பண்ணி விடுகிறேன் அது மட்டுமின்றி தலைப்பை பார்த்து விட்டு படிக்கப் போனால் எல்லாம் தனி மனித அ சாதி சண்டைகளாக இருக்கிறது ஆதலால் நண்பர் வட்டம் ஏதும் இல்லை,நாமக்கல் நண்பர்கள் இருந்தால் நேரில் பார்க்கலாம்.மற்றபடி மெயிலில் சில நண்பர்கள் சந்தேகம் கேட்பதுண்டு.<br /><br />ஆனால் இப்போது வேறு மாதிரி நிலை,இணையம் எனக்கு பணம் தர ஆரம்பித்து விட்டது. ஆம், வேலையை விட்டு விட்டு மேற்படிப்புக்காக கல்லூரி சேரும்வரை வீட்டில் இருக்கலாமென இங்கு வந்தேன். வலைப்பூக்களில் ஏதாவ்து செய்யலாம் என்று இணைய மையத்தில் உறுப்பினராக பணம் கட்டியபோது நான் web designer என்று சொல்ல அதே நாளில் ஒருவர் தங்களுக்கு ஒரு தளம் வேண்டுமென்று கேட்க ஒரு கல்லூரிக்கான அத்தளம் உருவாக்க ஆரம்பித்தேன்.அவர்கள் அதற்கு முன் bid செய்த ஒருவரின் சாம்பிள் தளத்தை காட்டினார்கள்,நான் தவறாக சொல்லவில்லை ஆனால் அது மிகவும் சாதாரணமானது,அதை விட மலிவாக தரமானதாக செய்து தர முதல் வேலை ஆரம்பமானது இப்போது வரை நான்கு ப்ரொஜெக்ட்கள் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கின்றன.<br /><br />சொந்த கம்பெனி ஆரம்பிக்க யோசிக்குமாறு மார்க்கெடிங் நண்பர்கள் சொல்கிறார்கள்,எனக்கு இதுவே கனவா,நனவா என்று தெரியவில்லை.<br /><br /><span class="technoratitag">Categories: <a href="http://del.icio.us/graphixhero/internet" rel="tag">internet</a></span><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6347226.post-1149606528898560662006-06-06T07:35:00.000-07:002006-06-06T23:45:33.820-07:00லட்டு பாஸாயிட்டான் ஸ்வீட் எடுநேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது அறிந்ததே.நான் இப்போது சுயதொழில் புரிவதால் நாமக்கல்லின் ஒரு இணைய மையம் (Browsing Center) தான் அலுவலகம்.நேற்று இந்த பரபரப்பில் நானும் முடிவு அறிவிக்க ஆரம்பித்தேன்.இந்த மாதிரி நாட்களில் தான் இம்மாதிரி மையங்களுக்கு வாய்ப்பு, ஒரு முடிவு அறிவிக்க பத்து ரூபாய்.<br /><br />என் அத்தை மகன் பத்தாவது அவன் செல்லப்பெயர் லட்டு, இனி வருவதெல்லாம் அவன் அம்மாவின் பேட்டி:<br /><br />"காலைல ஏழு மணி இருக்குங்கண்ணு, படக்குன்னு ஏந்திரிச்சான், பிதா சுதன் போட்டான்.அவனுக்கு புடிச்சது ஏசு தான்.அம்மா தண்ணி எடுத்து வை குளிக்கணும்னான்.எனக்கு ஒண்ணும் புரியல,அட நம்ம புள்ளைக்கு பக்தி எல்லாம் வந்துருச்சே அப்டியே சாமி ரூம் போனான் அவனுக்கு அடுத்து புடிச்சது கருமாரி அப்டியே கண்ண மூடி கும்பிட்டான்,வெளியே கிளம்பினான்.எங்க கண்ணு போறன்னேன், ஆஞ்சநேயர் கோயிலுக்குன்னான்,அம்மாவுக்கே அம்பது காசு கொடுக்காதவன் அவருக்கு அஞ்சு ரூபா உண்டில போட்டிருக்கானப்பா<br /><br />என்னக்கூட்டிட்டு இண்டர்நெட் வந்தான்,கோகுலு இருப்பான்னு நெனக்கலயாட்டமிருக்கு, யம்மா என்னம்மா மாமா உள்ள இருக்கு அதனால என்னடா அவன்ட்டயே குடு சீக்கிரம் பாப்பான்னேன் என்ன நினைச்சானோ சத்தமில்லாம பக்கத்தால வேற ஆளுகிட்ட குடுத்தான்<br /><br />கோகுல் முதுகப்பாத்தே டேய் லட்டு வாடா இங்கேன்னான் கிக்கிக்கீன்னு போனான் 234ன்னு பேப்பர் தந்தான் கோகுலு லட்டு பாசாயிட்டே ன்னான் நான் அப்பவே சொன்னேன் மாமா கண்டிப்பா பார்டர் பாஸாய்டுவேன்னுன்னான் <br /><br />வேட்டே அப்பா கிட்ட தானே டேய் எத்தனடா மார்க்கு? ஒடனே நம்மாளு மார்க்கு தெர்லப்பா பாஸாயிட்டேன் அவருக்கு இடி இடிச்சாப்ல ஆய்டிச்சி அது யார்ராவன் பாஸானத மட்டும் சொல்றவன்<br />செரி இனி என்ன பண்ண ரெண்டு நாள்ல என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணனும்,நீயும் சொல்லு கோகுலு மாமாகிட்ட"<br /><br />மதிப்பெண் மோகத்தில் அலையும் பெற்றோர் மத்தியில் திருப்தி படும் இவர் தங்கம் தான்.மனனக் கல்வியில் திறமை என்று காட்ட ஏதுமில்லை என்பது என் கருத்து.குறைந்த மதிப்பெண் வாழ்க்கையை பாதிப்பதும் தவறானதே.ஓவியத்தில் விருப்பமிருப்பவன் கணிதத்தில் பெயிலாகலாம் அதற்காக உடனே (இங்கே) பட்டறைக்கு அனுப்புவது என்ன நியாயம்? ராமானுஜரே பட்டப்படிப்பில் கணிதத்தில் மட்டும் அதிக மதிப்பெண்ணும் மற்ற பாடங்களில் பெயிலாவதுமாக இருந்தாராமே<br /><br />எப்படியாயிருந்தால் என்ன...? லட்டு பாஸாயிட்டான் ஸ்வீட் எடு கொண்டாடு<br /><br /><span class="technoratitag">Categories: <a href="http://del.icio.us/graphixhero/local" rel="tag">local</a>,<a href="http://del.icio.us/graphixhero/edu" rel="tag">edu</a></span><div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6347226.post-1149261989972779512006-06-02T07:38:00.000-07:002006-06-02T08:57:03.230-07:00பயம்...பயப்படுத்தும்"மீன் குஞ்சுக்கு நீந்தக்கற்றுத் தர வேண்டுமா?" என்பது போல பயம் எப்போதிருந்து ஆக்ரமித்ததென்றே நினைவில்லை, ஆனால் இப்போது வரை இருக்கிறது.ஆண் அழக்கூடாது, பயப்படக்கூடாது என்பவை கட்டாயம் என்கிற மாயை இருப்பதால் அதை வெளிக்காட்ட மறுக்கிறேனே தவிர பயம் என் நிழலை விட எனக்கு நெருக்கமானது.தனிமையோ, இரவு பன்னிரெண்டு மணியோ நிச்சயம் பயத்திற்கான காரணிகளாகப்படவில்லை.காரணம் இரவு 11 -12 மணிக்கு தனியாக சுற்றிய அனுபவங்கள் உண்டு.பயம் அந்த ஒரு குறிப்பிட்ட நாளுக்கு சொந்தமானது அப்போது மட்டுமே அது வரும்.<br /><br />கல்லூரி படித்தபோது சில நாட்களில் இரவு 12,ஒரு மணிக்கெல்லாம் பாத்ரூம் போக வேண்டிய கட்டாயம் வரும், தண்ணீர் அதிகம் குடித்தால் ;).அப்போதெல்லாம் பயமும் சேர்ந்து வரும்.அதை வீட்டில் சொன்னால் என்னடா இத்தனை வயசாயிடுச்சு இன்னமும் பயப்படுற என்பதில் ஆரம்பித்து ஆண்பிள்ளை வரை தேவையில்லாத சம்பந்தமில்லாத துறைகளுக்கெல்லாம் போவார்கள் என்பதால் அமைதி காப்பேன் யாராவது எழுந்தால் போகலாமென்று.ஆனால் கடைசியில் தனியாகத் தான் போக வேண்டி வரும்.அதுவும் பாத்ரூமில் கொஞ்சம் அதிக நேரம் நிற்க வேண்டி வரும் பாருங்கள்... கொடுமை.ஒரு நாள் ரொம்ப கடுப்பாகி விட்டது நானும் பயப்படுகிறேனே தவிர பேய் எதையும் பார்த்ததில்லை.நின்று இப்போ பேய் ஏதாவது இருந்தா வரணும் நான் பார்க்கணும் என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு ஐந்து நிமிடம் நின்று இருக்கிறேன்.அப்போதெல்லாம் "என்ன தம்பி கூப்டியா?" என்று ஏதாவது குரல் கேட்டிருந்தால் ஐயய்யோ Horrible!<br /><br />இப்போது வரை பேய் என்கிற கான்செப்டில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை, இருளில் நடக்கும்போது பின்னால் ஏதாவது சத்தம் கேட்டால் பயந்த மனது தனக்கேற்றவாறு கற்பனை செய்துகொள்கிறது, திரும்பிப் பார் ஒன்றுமில்லை வெறும் காற்று தான் என்று மூளை சொல்லும் ஆனால் எங்கே முடிகிறது?<br />அதே போல செத்தவர்கள் எல்லாம் பேயாக வேண்டுமானால் எத்தனை ஆடு,கோழி நானே சாப்பிட்டிருப்பேன் அதெல்லாம் வராதா ஏன் மனித உருவமே பேயாகிறது அதுவும் பொதுக்கூட்டத்தில் வரவேண்டியது தானே ஏன் தனியாக ஒருவன் போகும்போதே வர வேண்டும் என்றெல்லாம் வக்கணையாக யோசிப்பேன் ஆனால் பயம் பயம் தான்.<br /><br />மற்றபடி இதெல்லாம் ரகசியம் தான் காரணம் நான் பயப்படும் தருணங்கள் அரிதானவையாகி விட்டன.அதில்லாமல் மற்றவர்களை பயப்படுத்தும் அளவு பேய்க்கதை சொல்லமுடிவதால் அவர்களின் பயத்தை பார்த்துவிட்டு இப்படித்தானே நீயும் பயப்படுகிறாய் என்று எனக்கே கேலியாக இருக்கும்.இப்படி பயப்படுத்துவதற்கெனவே நிறைய கதைகள் உண்டு,அதில் மிக புகழ் பெற்றது மோதிரக்கதை... இப்போது வரை 100% இக்கதை மூலம் பயப்படுத்த முடியும் அவ்வளவு அருமையாக யோசித்திருக்கிறார்கள்<br />யாரென்று தெரியவில்லை அதுவும் இரவில் ஒரு கும்பலைக்கூட்டி இதை சொன்னால் பெட்டர்.மற்றபடி ஒரு பேய்க்கதைக்கான சூழலை உருவாக்கினால் போதும்.பலகீன இதயமுள்ளோர், குழந்தைகள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம்.<br /><br />ஒரு ஏழைக்கிழவி தன் மகனோடு இருந்தாள் அவளுக்கு தங்க மோதிரம் போட ரொம்ப ஆசை தன் சொத்தை விற்று போடுகிறாள், அன்று நல்ல மழை சோம்பேறி மகன் கோபத்தில் கொன்று விடுகிறான் எல்லோரிடமும் மறைத்து நோயில் செத்ததாக புதைத்து விடுகிறான் அன்றிரவு தான் நினைவு வருகிறது தங்க மோதிரம் கழட்டாமல் விட்டது...போய் தோண்டி பிணத்தின் கையிலிருந்து மோதிரத்தை உருவுகிறான் ஆனால் அது வரவேயில்லை அந்த மோதிரவிரலை வெட்டி மோதிரத்தை எடுத்துப் போகிறான்.அதற்கப்புறம் அவனுக்கு பணம் குவிகிறது. பங்களா, மனைவி என்று செட்டிலாகி விட அதே போல ஒரு மழை நாள்...<br />அதே போல ஒரு கிழவி வாசலில் ஹீனமான குரலி "ஐயா பசிக்குதுய்யா" என்கிறாள்<br />இவனுக்கு மனது கேட்கவில்லை, அவளை உள்ளே அழைத்து உட்கார வைக்கிறான்.நலம் விசாரித்தான்.<br />சாப்பாடு போட்டான், அவன் தாய் போலவே இருக்கிறாள், <br /><br />"ஏன்மா உங்க குடும்பத்தில யாருமில்லயா?"<br />"இருந்தாங்கப்பா என் மகன் கடைசி வரை இருந்தான் இப்போ பிரிஞ்சிட்டான் கூட்டிட்டு போக தான் வந்திருக்கேன்"<br />"சரி சரி சாப்பிடுங்க"<br /><br />அவ்வப்போது கிழவி அவனை தீர்க்கமாக பார்க்கிறாள், அவன் மனசாட்சி குத்த குனிகிறான் அப்போது தான் கவனித்தான்...கிழவிக்கு மோதிர விரல்...இல்லை<br />"என்னம்மா இது மோதிர விரலக்காணோம்"<br />"அது...வெட்டிட்டாங்கப்பா"<br />"யாரும்மா வெட்டினது?" கேட்டது தான் தாமதம் கிழவி சடாரென நிமிர்ந்து முறைத்து பார்த்தாள்<br />"இல்ல தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் யாரும்மா வெட்டினது?"<br />..<br />..<br />..<br /><h3>நீ தான்</h3> இதை மட்டும் திடீரென சத்தமாக சொல்ல வேண்டும் ஒருமுறை கம்பெனியில் எல்லோரையும் உட்கார வைத்து சொன்னேன், ஒரு பெண் பாவம்...வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.<br />என் பயமும் கூட என்னைப்பொறுத்தவரை இப்படி ரசிக்கக்கூடியதாக வாழ்வின் சுவைகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது,இருக்க வேண்டும் ஆதலால் பேய்கள் வாழ்க<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6347226.post-1149166195199121972006-06-01T04:33:00.000-07:002006-06-05T22:12:01.193-07:00அருவி அபாயங்கள்காட்டருவிகள் உற்சாகம் தருபவை, பெரும்பாலும் மலைகளுக்கிடையே மட்டுமே காண முடிவதால் அவற்றை நினைத்தாலே லேசாக குளிரடிக்கும்.ஆனால் அருவிகளின் இன்னொரு முகம் கோரமானது.<br /><br />நாங்கள் கல்லூரியில் படித்தபோது அடிக்கடி கொடைக்கானல் மற்றும் அடிவாரத்திற்கு டூர் போவோம்( பழனியிலிருந்து கொடைக்கானல் ரொம்ப பக்கமே).அங்கே கொடைக்கானல் அடிவாரத்தில் ஒரு 4 கிலோமீட்டர் தொலைவில் ஒரு அருவி உண்டு.காட்டுப்பாதை நடந்து தான் போக வேண்டும், அங்கே ஹோட்டல் முதலாளி,வேலை செய்தவர்கள் எல்லாம் இப்போதும் எங்கள் நெருங்கிய நண்பர்கள் (வள்ளுவர் ஹோட்டல் என்பது பெயர் பழனியில் புகழ்பெற்றது).பிரியாணி செய்து ஐம்பது பேர் போனோம்.4 கிலோமீட்டர் தள்ளி அவ்வளவு அழகாக ஒரு அருவி அது தான் காட்டுப்பாதையின் முடிவு.சலசலவென தண்ணீர் சப்தம் நண்பர்கள் கையோடு 'தண்ணி' எடுத்து வந்திருந்தார்கள் (அப்போதெல்லாம் நான் பழகியிருக்கவில்லை நல்ல பையன்...) ஸ்னாக்ஸ் கொள்ளையை ஆரம்பித்தோம், தண்ணியடிப்பவன் பக்கத்தில் இப்படி ஒரு கும்பல் கடுப்பேத்தும் ஆனால் அவர்களும் எதிர்காலத்தில் அடிக்க ஆரம்பித்து விடுவது தான் ஹைலைட்.<br /><br />ஒரு இருபது பேர் அப்படியே குளிக்க கிளம்பினோம்.அருவி என்றால் ஒரே ஒரு இடத்தில் இருந்து விழவில்லை கொஞ்ச தூரத்தில் மெயின் அருவி விழ அங்கே ஒரு பழைய காலத்து குட்டி அணைக்கட்டு ஸ்டைலில் தடுப்பு இருக்க அதற்கு கீழே ஓட்டைகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.நாங்கள் அந்த தடுப்பின் மேல் அமர்ந்திருந்தோம்.ஐஸ்கட்டிகளை மொத்தமாக உருக வைத்திருந்தால் எவ்வளவு சில் என்றென்று இருக்குமோ அப்படி இருந்தது, அப்படியே குளித்தபோது ஒருவன் இங்கிருந்து நீந்தியே மெயின் அருவிக்கு போகலாம் என்றான் எல்லோரும் ஒப்புக்கொண்டோம்.எனக்கு அப்போது ஷான் நீச்சல் பழக ஆரம்பித்திருந்த காலம் லேசாக உதறல் தான் இருப்பினும் 20 பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் நீந்த ஆரம்பித்தேன் பார்க்கும்போது ரொம்ப பக்கம் போலத் தெரிந்த அருவி நீந்தும்போது ஏதோ தொலைவில் தெரிந்தது ஒவ்வொருவராக என்னைத் தாண்டிப்போக ஆரம்பித்திருந்தார்கள் நான் தான் கடைசி சரி கொஞ்ச நேரம் நின்று விட்டு நீந்துவோம் என்று அப்படியே நின்றேன் மார்பளவு தண்ணீரில் தரை தட்டுப்பட்டது ஊறிய இலை,தழைகளோடு.ஒரு நொடி தான் அப்படியே காலில் தரை கரைகிற உணர்வு அதாவது அது தரை இல்லை இலை,தழைகள் கடைசி வரை அது மட்டுமே அதாவது நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் இத்தனையும் ஆலோசித்தபோது தான் உறைத்தது வாய் வரை முழுகி விட்டது மூளைக்குள் முதுகெலும்பு வழி மின்சாரம் வ்ர்ரென பாய கண்களை மூடிக்கொண்டு நீந்த ஆரம்பித்தேன் 20 பேரையும் முந்தி வெறும் ஒரு நிமிடத்தில் மெயின் அருவியைத் தொட்டிருந்தேன்.என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.<br /><br />இதற்கடுத்து சொல்லப்போவது மிகவும் பயங்கரமானது மற்றும் இப்போதும் நிகழும் சம்பவம்.என் பக்கத்து வீட்டு நண்பர் பொள்ளாச்சி அருகே அருவிக்கு குளிக்க அவர் நண்பர்களுடன் போயிருக்கிறார்.குளித்துக் கொண்டிருக்கும்போதே பத்து பேரில் ஒருவரைக் காணோம், சரி என்று விட்டு விட்டார்கள் போகும்போது தான் சீரியஸ்ஸாக உறைக்க எல்லோரும் தேடியிருக்கிறார்கள் ஆளே கிடைக்கவில்லை இரவு வரை கிடைக்கவில்லை மறு நாள் போலீஸுக்கு தகவல் சொல்லி, குடும்பத்திற்கு தகவல் சொல்லி எல்லோரும் வந்திருந்தார்கள்.கூட்டம் கூடி பேசிக்கொண்டிருக்க அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், ஒருவேளை தண்ணீருக்குள் பாறைகளில் சிக்கியிருக்கலாம், இங்கிருக்கும் ஊசி,தேனெடுப்பவர்களை கேட்டால் தேடிப் பார்ப்பார்கள் என்று.அவர்களை அழைத்திருக்கிறார்கள் தேடிப்பார்க்க அவர்கள் செய்த டீல் தான் கொடுமையானது பதினைந்தாயிரம் டிமாண்ட் செய்திருக்கிறார்கள்.அப்போதும் பிணம் தான் கிடைக்கும் என்று சொல்லி.தரும் வரை போகவில்லையாம், தந்ததும் வெறும் அரை மணி நேரம் தானாம், கால் பாதத்திற்கு மேல் ஒரு காயம் பாறையிடுக்கில் சிக்கி உயிர் போய் விட்டது என்று கூலாக சொல்லி பணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.<br /><br />என் நண்பருக்கு சந்தேகம் பொறுமையாக விசாரிக்க பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன அதாவது அந்த சிலருக்கு அது தான் வேலையாம் அவர்களுக்கு தண்ணீர் ஆழத்திற்குள் இருக்கும் அத்தனை விஷயமும் தெரியுமாம்.தண்ணீருக்குள்ளேயே காத்திருந்து இப்படி வருபவர்களில் அவ்வளவு லாவகமாக நீந்தத் தெரியாதவரை சரேலென நீருக்குள் காலைப்பிடித்து இழுத்துப்போய் பாறையிடுக்குகளில் வேகமாக அடித்து சொருகி வைத்து விடுவார்களாம்.அப்புறம் ஒன்றும் தெரியாத மாதிரி வெளியே வந்து விடுவது.எதற்காக... அந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்துக்காக.அதைக் கேள்விப்பட்டதில் இருந்து இப்போது வரை அருவிகள் எனக்கு பயத்தையும் மிரட்சியையுமே தருகின்றன.<br /><br />ஆகவே எச்சரிக்கை தெரியாத அருவிகளில் குளிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6347226.post-1149054066814182042006-05-30T22:14:00.000-07:002006-05-31T03:37:14.870-07:00தமிழ்மணத்திற்கு என் ஐடியாக்கள்தமிழ்மணத்தில் இப்போது புதிதாக Cloud அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.இது போல தர நிர்ணயம் (Quality Check) பயனர் மூலமாகவும் கேட்பார்கள்.என் தளத்திற்கு 90 சதவீத ட்ராபிக் தமிழ்மணம் மூலமே வருகிறது ஆதலால் சில யோசனைகள் தரலாம் என விழைகிறேன்.<br /><br />"Search Column" ஒரே ஒரு டைப் பண்ணும் பகுதி மற்றும் Enter பட்டனோடு முதல் பக்கத்தில் வைப்பது தான் சிறந்தது மற்றும் வழக்கமானது.ஆனால் நம் தமிழ்மணத்தில் அது இரண்டாம் பக்கம் ஒரு லிங்க் வைத்து இன்னும் ஒரு புது பக்கமாக வருகிறது.இவ்வளவு தூரம் வந்து பார்க்க பயனர் யோசிக்க மாட்டார் அல்லது அப்படி ஒரு வசதி இருப்பதே தெரியாமல் போய்விடும்.<br /><br />மறுமொழி மட்டுறுத்தல் (Comment Moderation) மூலம் அதிக கமெண்ட் தரப்பட்ட பக்கங்கள் தனியே காட்டப்படுகின்றன.அதிக பேர் பாராட்டியோ விவாதித்தோ தரப்படும் கமெண்ட்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது,(எனக்கும் நிறைய முறை இங்கு இடம் கிடைக்கிறது என்றாலும்)இந்நோக்கமே சிதைபட்டுள்ளது.பெரும்பாலும் கமெண்ட்களில் வாக்குவாதங்கள் தான் நிகழ்கின்றன.இதனால் தரமில்லாத பதிவுகளும் கூட சில சமயங்களில் இடம் பெற வாய்ப்புள்ளது/நல்ல பதிவுகள் இடம் பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது அதாவது கமெண்ட் எழுதப்படாத நல்ல பதிவுகளும் உண்டு எல்லா பிரச்னைகளையும் தெளிவாக அலசும் பதிவுகளுக்கு பாராட்டை தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றாது, ஏற்கனவே பத்து பேர் பாராட்டியிருந்தால் அடுத்து வருபவர் சொல்ல நினைப்பதை அவ்வளவு பேரில் யாராவது ஒருவர் சொல்லியிருப்பார்.இதற்கு பதில் அதிகம் பேர் விசிட் செய்த பதிவுகளை காட்டலாம் (எப்படி என்று நானறியேன் ஒரு யோசனை அவ்வளவே)<br /><br />ஒரு பதிவை ஒருவர் தமிழ்மணத்தில் அப்டேட் செய்ததும் 'ஜன்னலை மூடு' என்று காட்டுகிறது அப்படியே அருகே தமிழ்மணத்தின் மூலப்பக்கத்திற்கு ஒரு லிங்க் தரலாம்.பதிவருக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஓய்வாக ஏதேனும் படிக்கத் தோன்றும் உடனே தமிழ்மணம் வர ஏதுவாக இருக்கும்.<br /><br />கவிதை,சிறுகதைகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை அதற்கு ஏதாவது போட்டி நடத்தலாம் (பரிசு... ட்ராபிக் தான்) சிறந்த நான்கு வரி கவிதை ஒன்றை தினமும் தேர்ந்தெடுத்து முகப்பு பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் போடலாம்.<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6347226.post-1148984784682673232006-05-30T02:01:00.000-07:002006-05-30T21:22:03.596-07:00புதுப்பேட்டை - விமர்சனம்<a href="http://www.pudhupettai.com/"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3972/329/320/5_2%7E0.jpg" border="0" alt="" /></a><br />படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்டியே டான்செட் எழுத சென்னை வந்து மறு நாள் படம் பாக்கலாம்னு தியாகராஜா போனோம்.அங்கே தான் சனி,ஞாயிறு ரிசர்வ் பண்ணாம டிக்கட் கிடைக்கும்.சில தடவை படம் பாக்கப்போறப்ப "ஹை சூப்பர்"னு துள்ளலாம் அதும் முத மூணு நாளைக்குள்ள அப்டியாப்பட்ட படம் பாக்றது பெரிய அதிர்ஷடம்னு நினைப்பேன், காதல்,காதல் கொண்டேன் மாதிரி.ஆனா எல்லா தடவையும் நாம நினைக்கிறது நடந்துடுதா என்ன?<br /><br />மிகவும் சாதாரண அரதப்பழைய கதை, மிக சாதாரண ஏழைப்பையன் தாதாவாகிறான்.தாதாக்களின் கதைகளில் வேறெதுவும் பெரிதாக சொல்ல முடியாது என நினைத்தோ என்னவோ திரைக்கதை பலமாக கட்டப்பட்டிருக்கிறது.முதல் பாதியை செதுக்கியிருக்கிறார்கள்.அட்டகாசம் ஒரு பத்து நிமிடம் படம் போன பிறகு புதுப்பேட்டை என்று டைட்டில் கார்டு போடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது.<br /><br />தனுஷ் ஸ்கூல் யுனிபார்மில் வருவதிலிருந்து அரசியல்வாதியாக மேடையேறுவது வரை குறையில்லாமல் நடித்திருக்கிறார்.தாதா என்பவனுக்கான ஒரு ஆஜானுபாகுவான உருவம் ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கேஷிவலாக அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.ஆக்ரோஷம், சிரிப்பு, கோபம் என எல்லா ஏரியாவிலும் தனுஷ் ஆட்டம் தான்."அம்மான்னா ரொம்ப பிடிக்குமா" என்றதும் லேசாக சிரித்து விட்டு "யாருக்குத்தான் பிடிக்காது?" என்பது அற்புதம்.அதே போல தனியாளாக எதிரிகளிடம் மாட்டி மரண அடி வாங்குவதும் சீறி திருப்பி அடிப்பதும் மிகவும் இயல்பு.தனுஷை சராசரியானவராக காட்டியிருக்கிறார்கள் அதுவும் பலமே, ஸ்நேகாவை விபசாரத்திற்கு அனுப்பக்கூடாது என்பதும்,பிறந்த பிள்ளையை தன் முகம் வைத்து தன் மகன் தானா என பார்ப்பதும், ஸ்நேகா போகிறேன் என்றதும் பணம் வேணுமா என்பதுமாக.<br /><br />அடுத்தது ஸ்நேகா, நிச்சயம் பராட்ட வேண்டிய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.குடும்பப்பாங்கான அவர் விலைமாதுவாக நடிக்கப்போகிறார் என்றதுமே பல ரசிக நெஞ்சங்கள் வெடித்திருக்கும் (பெண்கள் உட்பட).அதெல்லாம் கண்டு கொள்ளாமல் பொசுக்கென்று அழுவதும், "இப்பவேவா" என தைரியமாக கேட்கும் பெண்ணாகவும் மெல்லிய இயல்புகளை நிறைய இடங்களில் காட்டியிருக்கிறார்.<br /><br />மற்றும் தனுஷின் அப்பா,கஞ்சா கும்பல் லீடர் அன்பு, அதற்கடுத்த அரசியல் தலைவர்,எதிரி மூர்த்தி,நண்பர்கள் எல்லாருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.நிறைய முகங்கள் அதிகம் இதற்கு முன் பார்க்கப்படாதவை, இனி கவனிக்கப்பட வேண்டியவை.<br /><br />தைரியமான காட்சிகளும் அதிகம், கெட்ட வார்த்தையில் தாயை ஒருவன் திட்டுவதை காட்டுவது, வெட்டு குத்து,விலைமகள் வாழ்க்கை,ஜன நாயகத்தில் நிகழ்வதை காட்டும் க்ளைமாக்ஸ் இப்படி நிறைய.<br /><br />டைமிங் ஜோக்ஸ் ஏராளம், கதையோடு இப்படி சேர்க்க செல்வராகவனிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.முதல் தடவை கையை வெட்ட தனுஷை கூட்டிப்போகும் ரவுடி பண்ணும் கமெண்ட்களில் தியேட்டர் அதிர்கிறது.அதுவும் கடைசியாக வேலை முடித்தபின் "கவலைப்படாத மேல உன்னப்பத்தி நல்லா சொல்றேன்" என்பது சூப்பர்.<br /><br />படத்தின் இசை,திரைக்கதை,காட்சியமைப்பு என எல்லா ஏரியாவும் திருப்தியே ஆனால் கதை ஹிஹி அங்கே தான் சறுக்கலே.தாதாக்களின் வாழ்க்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை ஆமாம் என்கிற மாதிரி காட்டப்பட்டிருக்கிறதே தவிர தாதாக்களின் ஹீரோயிசம் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.<br />எளிய உதாரணம் தனுஷைத் தவிர வேறு யாருமே துப்பாக்கி உபயோகப்படுத்தாதது, ஆரம்பத்திலேயே தனுஷ் வரிசையாக கொலை செய்ய எல்லோரும் தேமே என இருப்பது,சாவது, போலீஸ் எல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் இப்படி மற்ற தாதா படங்களில் என்னென்ன குறைகள் இருக்குமோ அவை இங்கேயும் ப்ரெசண்ட் சார் சொல்கின்றன.<br /><br />ஸ்நேகா முதல் தடவை ரயில்வே ஸ்டேஷனில் காட்டப்படும்போது விலைமாதுவாக மேக் அப் அப்படி பொருந்துகிறது ஆனால் அப்புறம் எல்லாம் பாந்தமான முகம் தான், அதுவும் விலைமகளாக கொஞ்சம் காட்சிகள் தான் மற்றபடி தாதா மனைவியாக பதிகிறாரே தவிர விலைமகளாக பொருந்தவில்லை, விலைமாதுவின் பிரச்னைகள் அதிகம் சொல்லப்படாததும் ஒரு காரணம். வேறொருவனுடன் இருக்கும்போது தனுஷ் போனில் பேசும்போது நடக்கும் சித்ரவதை காட்டப்படுகிறது, ஆனால் விலைமாதுக்களின் நடைமுறைப்பிரச்னைகள் அதை விட அதிகம் அதுவும் உடலை விட மனம் சம்பந்தப்பட்டவை ஆனால் அவை எதுவும் இங்கே காட்டப்படவில்லை படத்திற்கான ரிசர்ச்சின்போது விலைமகள் பற்றிய சிறுகதைகள் படித்திருந்தால் கூட போதும்.<br /><br />அதேபோல அதீத வன்முறை காட்சிகள், இப்படிப்பட்ட கதைக்கு இப்படித்தான் எனலாம் ஆனால் தாதாக்கள் வெட்டுவதால் வாழ்பவர்களில்லை வெட்டுவேன் என்று மிரட்டியே வாழ்பவர்கள் அவர்கள் பிரச்னை உயிர்பயம் தான் ஆனால் கிரவுண்டில் நூறு பேரை அநாயசமாக வெட்டுவதெல்லாம் அய்யய்யோ...<br /><br />எடுத்தவுடனே தனுஷ் எஞ்ஜாய் பண்ணுகிறார் என்று காட்ட எங்க ஏரியா பாடல் இது போன்ற விஷயங்களை செல்வராகவனால் தவிர்க்க முடியவில்லையா? அதிலும் இயல்பாகவே சென்னை பையன்களுக்கு படித்தவர்கள் மீது ஒரு கோபம் உண்டு அதை நயமாக காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை அந்தப்பாடலை ஆடியோவில் கேட்டு விட்டு நிறைய எதிர்பார்த்தேன்.சோனியா அகர்வால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார், என்ன கோபமோ? பாடல்களில் இரண்டைத் தவிர வேறெதுவும் காட்சிகளுக்கு தேவையில்லை நீக்கி விடலாம்.இரண்டாம் பாதி நீளம் அதிகம் ஒரு கட்டத்தில் கிளம்பலாமா என்று பேச்சுக்குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன.மூன்றாம் நாளே ஆப்பரேட்டர் இடைவேளைக்கப்புறம் சிலபல காட்சிகளை கட் பண்ண ஆரம்பித்து விட்டார்.<br /><br />சரி க்ளைமாக்ஸ் பேக்ரவுண்டில் தனுஷ் பேச பொறுமையாக காட்சிகளில் மற்ற நிலைகளை காட்டியிருக்கலாம் தனுஷை நிதியமைச்சராக கெட் அப் காட்ட முடியாது என்று நினைத்தோ என்னவோ ஸ்லைடு போட்டு விட்டார்கள்.<br /><br />செல்வராகவனிடம் எதிர்பார்க்கப்படுவது மற்ற டைரக்டர்களைப்போல திரைக்கதையில் காட்டப்படும் வெரைட்டியல்ல கதையில் இருக்கும் வெயிட்.படம் முடிந்து வெளியே வரும்போது கூட்டத்தில் என்னை யாராவது குத்தி விடுவார்களோ என்று பயம் தான் வந்தது.<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6347226.post-1148556265780895372006-05-25T03:55:00.000-07:002006-05-25T08:47:48.123-07:00நகம் வளர்த்தேன் நான் நகம் வளர்த்தேன்கல்லூரியில் படித்த போது அப்படியொரு நீளமான நகம் வளர்த்திருந்தேன்.காரணம் ச்சும்மா தோணுச்சு வளர்த்தினேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை just to impress others வேறென்ன? அதிலும் குறிப்பாக சில கூடப்படிக்கும் பெண்களை.மற்றும் பலரும் பலவிதமான காரணங்களை சொன்னாலும் கடைசியாக மற்றவர்களை கவருவதில் தான் வந்து நிற்கும்.இப்படி கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே மிக நீளமான நகம் வளர்த்தவர் இப்படி வளர்த்தால் விரல்கள் செயலிழந்து விடும் எனத்தெரிந்தும் வளர்த்தேன் என்று சொன்னதாக படித்த போது வேறென்ன தோன்றும்?<br /><br />உண்மையில் இதற்கு பலனுண்டு, நிஜமாகவே நிறைய பேரை நம் பக்கம் கவனிக்க வைக்க ஒற்றைத்தோடு, முன் தலை கலரிங், கறுப்பு band ஆகியவை உதவும் அதுவும் நம்மையுமறியாமல் நாம் எதிர்பார்க்காதவர்கள் கூட கவனிப்பார்கள்.அப்படித்தான் என் ஹிட்லிஸ்ட்டில் இருந்த பெண்கள் கவனித்தார்களோ இல்லையோ ஹெச் ஓ டி கவனித்தார்.அப்படியே அப்பாவிடம் போட்டுக்கொடுத்தார். <br /><br />ஒரே ஒரு தேவைக்காக இம்மாதிரி அசவுகரியங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருப்பது தான் கொடுமை.அதிலும் அம்மாவிலிருந்து யாரென்றே தெரியாத பயணி வரை, “ஏன்ப்பா இப்படி வளர்க்கிறே?” என்பார்கள் ஏதோ சாதனைப்பயணத்தை விசாரிப்பது போல. இப்படித்தான் பக்கத்து வீட்டு சிறுமி கேட்க “அதுவா என்னை யாராவது தொணதொணன்னு கேள்வி கேட்டா கோபம் வந்து அவங்க கன்னத்துல ஒரு கீறு கீறிடுவேன்” என்றேன் முகத்தில் கொஜ்சமும் சலனமின்றி .அதற்கப்புறமும் அவள் என்னிடம் பேசினாள் கொஞ்சம் தள்ளி நின்றே.<br /><br />உண்மையிலேயே கீறல்கள் விழாமல் இருக்காது அதுவும் கூட இருப்பவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.அதாவது கபடி,நீச்சல் ஆகியவற்றில் முக்கியமாக, முக்கியமின்றி இன்னபிற.தான் பாதிக்கப்படுவதென்றால் நல்ல தூக்கத்தில் கொசுக்கடி மற்றும் மிக அரிதாக சாப்பாட்டு இலையை கவனிக்காமல் கழுவும்போது.அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது அடுத்த முக்கிய வேலை.சிலர் இதை செய்ய சோம்பேறித்தனப்பட்டு நெயில் பாலிஷ் போடுவதும் உண்டு.<br /><br />சினிமாக்களில் ஹீரோ யாரும் வைத்திருந்தார்களா நான் பார்த்ததில்லை.ஆனால் நிச்சயம் நீள நகம் வளர்ப்பது தவறு.காரணம் என் நீள நகத்தின் சோக மற்றும் பயங்கரமான முடிவு தான்.மெல்லிய பலகீன இதயமுள்ளவர்கள் முடிவை படிக்க வேண்டாம்.<br /><br />பேருந்தில் புட்போர்டு போடுவது சிலபஸ்ஸில் இல்லாத கடமை.அப்படி கடைசியாக கல்லூரி ஸ்டாப்பிங்கில் குதித்த போது தான் சுளீர்ரென்று ஒரு வலி தண்டுவடம் தாண்டி வேகமாக மூளைக்கு செய்தி அனுப்பியது.கண்கள் திருப்பினால் பாதி நகம் பழைய அலுமினிய கடைசி ஜன்னலில் சிக்கி கிழிந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.கத்த நேரமில்லை பஸ்ஸை எடுத்து விட்டார்கள் இன்னமும் பாதி நகம் தான் வலித்தாலும் பரவாயில்லை என்று வேகமாக இழுக்க நான் நினைத்தபடியே அப்படியே நக முனை நோக்கி கிழிந்து கையை விடுவித்தேன்.<br /><br />ஆகவே ஆபத்துகள் நாம் அறியாத திசையிலிருந்து தான் வரும் என்பதை மனதில் கொண்டு நகம் வளர்ப்பவர்கள் யோசிக்கவும்<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6347226.post-1147690096311513752006-05-15T03:07:00.000-07:002006-05-15T18:25:18.670-07:00லாஜிக் லாஜிக் லாஜிக்தமிழ் சினிமா என்று தனிமைப்படுத்தக்கூடாது, தேசிய அளவிலேயே நம்முடைய லாஜிக் மீறல்கள் அதிகம் அதுவும் சினிமா என்பதை தாண்டி சீரியல்,விளம்பரங்கள் வரை ஒரே காமெடி தான்.நானும் என் மாமாவும் (அதிசயமாக) பொதிகை சேனலை பார்த்துக் கொண்டிருந்தோம், அதில் ஒரு விளம்பரம், டாக்டர் சொல்கிறார் "நீங்க அப்பாவாயிட்டீங்க" உடனே அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் "ஆ நிஜமாவா" அடப்பாவிகளா என்னய்யா எxபிரஷன் இது.<br /><br />அதாவது ஹீரோ நூறு பேரை அடிப்பதை எல்லாம் தாண்டி சின்ன விஷயமும் எனக்கு உறுத்தும்.சிறு வயதில் படம் பார்க்கும்போது ஹீரோ ஹீரோயின் பின்னாலேயே சுற்றுவார் அப்போதெல்லாம் இவர் வேலைக்கே போகாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நினைப்பேன்.அதே போல கல்யாண மேடையில் மணமகள் புரட்சியாக கல்யாணத்தை நிறுத்துவது, அப்புறம் நிச்சயமான சில தினங்களில் கல்யாணத்துக்கு வந்த (?!) வேறு யாரோ ஒருவரை காதலிப்பது இதெல்லாமே நான் பார்த்ததேயில்லை (அரிதாக செய்தித்தாள்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்)<br /><br />அப்புறம் சாதியை எதிர்த்து ஹீரோ பேசும் வசனங்கள் அடப்போப்பா எங்கே ஜாதி இல்ல? திருமணம் முதல் அரசியல் வரை, வலைப்பூக்கள் முதல் டீக்கடை பெயர் வரை எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கத்தான் செய்கிறது ஏதோ இளைஞர்கள் ஜாதியை அறவே வெறுப்பது போல காட்டுவது... இளைஞர்கள் (ஜாதி பற்றி பேச விரும்பாத நண்பர்களை தவிர்த்து விட்டு) தங்களுக்குள் வெகு சாதாரணமாக ஜாதி பற்றி பேசுவதையும் சில ஜாதிகளை திட்டுவதையும் கண்டிருக்கிறேன்.தங்கள் ஜாதியில் வரதட்சிணை எவ்வளவு வாங்குவார்கள் என்பது பற்றி கூட அரட்டை நீளும்.<br /><br />என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய லாஜிக் மீறல் நிகழ்கிறதென்றால் அது காதலில் தான் பஸ் ஸ்டேண்டிலோ ஏதோ ஒரு கூட்ட நெரிசலான இடத்திலோ பார்க்கிற பெண்ணை அடுத்தடுத்து எப்படி தான் இவர்களால் மட்டும் மீட் பண்ண முடிகிறது? நானும் சென்னையில் எத்தனையோ முறை ட்ரை செய்திருக்கிறேன் 99% ஒரு முறை பார்த்த பெண்ணை மறுமுறை பார்ப்பதரிது.<br /><br />அப்புறம் மீறிப்போனால் இரண்டே இரண்டு பெண்களைத்தான் ஹீரோ காதலித்திருப்பாராம் (என்ன கொடும சரவணன்?) அதே போல ஹீரோயின் ஒரே ஒருவரைத்தான்.நாமெல்லாம் கணக்கு போட்டா அஞ்சாறு ஆட்டோகிராப் தாண்டுமே<br /><br />சரி இதக்கூட ஒத்துக்கலாம்யா ஹீரோயினம்மா நம்ம ஹீரோவோட சில பல திறமைகள்ல மயங்கி ப்ரபோஸ் பண்ணுவாங்களாம்.யேயப்பா தமிழ்நாட்டுல எந்த ஊர்லயா நடக்குது இந்த அதிசயம்? நானெல்லாம் கேள்விப்பட்டதே இல்லப்பா அப்டியே நடந்தெல்லாம் அது சப்ப ஃபிகரா இருக்கும் அது கூட ப்ரபோஸ்லாம் பண்ணாது பண்ணினா இவரு ஒகே சொல்ல மாட்டாருன்னு பட்டுன்னு வீட்ல சொல்லி சொந்தத்துல கல்யாணம் முடிச்சிடும்.<br /><br />அடுத்தது ஹீரோயினோட ட்ரெஸ் (இதுல லாஜிக் மீறல நானும் சில நண்பர்களும் காட்சிக்கு அவசியம் எனில் வைத்துக்கொள்வதில் தவறில்லை என ஒப்புக்கொள்கிறோம் என்றாலும் ;) நிஜத்தில் தமிழ்பெண்கள் அப்படி ட்ரெஸ் பண்ணுகிறார்களா? சென்னை வந்து பார்த்தாலும் அப்படி உடுத்துபவர்கள் எல்லாம் வட நாட்டு பெண்கள் தானே தவிர தமிழ் பெண்கள் மிகக்குறைவே.(அந்த சில நண்பர்கள் கமெண்ட்டில் கை தூக்கவும்)<br /><br />ஆங்கிலப்படங்களிலும் லாஜிக் மீறல்கள் உண்டு இது இண்டர்நேஷனல் பிரச்னை தான் ஆனால் இதற்கு காரணம் எப்போதும் ரியாலிட்டியோடு வாழும் நமக்கு எண்டர்டைன்மெண்ட் கற்பனையானதாக இருப்பது ஒரு மாறுதல் தரும் என்ற லாஜிக் ஆக இருக்கலாம்.அங்கேயும் ரியாலிட்டியே இருந்தால் எதற்கு தியேட்டர் வரவேண்டும்? <br /><br />வெகுசில படங்கள் ஈரானிய ஆங்கில டாகுமெண்டரி போல வருவதும் ஹிட்டாவதுமாக இருந்தாலும் "சுத்தமான உணவு எங்கள் சிறப்பம்சம்" என்று சில விடுதிகளில் எழுதியிருப்பார்கள் சுத்தமான உணவு சிறப்பம்சமல்ல அத்தியாவசியத் தேவை அது போல ரியாலிட்டியோடு படம் வருவது ஒரு சிறப்பம்சம் போல விளம்பரப்படுத்தப்படுகிறது வேறு வழி பார்ப்போம் ;)<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6347226.post-1147185688663614072006-05-09T07:28:00.002-07:002006-05-09T07:41:28.676-07:00செல்வி சீரியல் நிறுத்தாதற்கு காரணம்?நேத்தோட தேர்தல் ஜீரம் முடிஞ்சிடிச்சி ஆனா நேத்து அம்மா சொன்ன விஷயம் இது... அந்தம்மா இல்ல எங்கம்மா தலைவா.அதாவது சரத்குமார் ராதிகாவோட அதிமுகவில சேர்ந்ததுக்கப்புறமும் செல்வி சீரியல் நிறுத்தப்படலை, ஏன்னு யோசிச்சு பாத்தா நிறைய அரசியல் தந்திரங்கள் இருக்குன்னு புரியும்.அதாவது அந்த சீரியல் தான் தாய்க்குலங்கள் அதிகம் பார்க்கிறது<br />பொசுக்குன்னு நிறுத்திப்புட்டா அதுவே ஒரு வகை அனுதாப அலையா மாறியிருக்கவும் வாய்ப்பிருந்தது, அப்டி எதுவும் ஆகிடக்கூடாதுங்கிறது ஒரு காரணம்.<br /><br />அடுத்து நிறைய திமுக ஓட்டு கேக்குற விளம்பரங்கள் மறைமுக நேரடி பிரச்சார விளம்பரங்கள் அந்த நிகழ்ச்சி நடுவில ஒளிபரப்பப்பட்டது. எதிர்க்கட்சியா இருந்தாலும் அதிமுகவாலயோ ராதிகாவாலயோ இத தடுக்க முடியல.தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் தான் எந்த மாற்றமா இருந்தாலும் நடக்கும், சும்மாவா சொன்னாங்க தமிழ் நாட்டு சாணக்கியர்னு.<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6347226.post-1146745179662780992006-05-04T05:03:00.000-07:002006-05-10T01:27:31.856-07:00லோக் பரித்ரன் வெல்லுமா?சமீபத்தில் எனக்கு நிறைய உணர்ச்சி வசப்பட்ட நண்பர்கள் லோக் பரித்ரனுக்கு ஓட்டு போட சொல்லும் எஸ்எம்எஸ்ஸை அனுப்பியிருந்தார்கள்... நான் சென்னைவாசியல்ல என்பதை மறந்த என் சென்னை நண்பர்கள்.நாமக்கல்லில் போட்டியிடவில்லை என நினைக்கிறேன்.நேற்று என் சென்னை தோழியும் தான் இக்கட்சிக்கு தான் ஓட்டு போட போவதாக தெரிவித்தாள், "நீ முதலில் ஓட்டு போட போவியா" என்றேன்.<br /><br />இளைஞர்கள் ஆதரவு இருக்கலாம், ஆனால் இளைஞர்கள் இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவது போல தெரியவில்லை.இளைஞர் எழுச்சியெல்லாம் ஓல்டு ஃபேஷனாகி விட்டது, இதில் நல்ல விஷயம் மொழி,மதப்பிரிவினைவாதங்களுக்கு இன்றைய சமுதாயம் அடிமையாவதில்லை, யாராவது அப்படி தூண்டினால் கூட எஸ்எம்எஸ் கடி ஜோக் போல சிரித்து விட்டு விலகி போகிறார்கள்.<br /><br />வயதனவர்களை,பெண்களை ஈர்க்க இது பத்தாது.என்ன தான் நகரம் என்றாலும் அங்கும் நடுத்தர,ஏழை மக்கள் தான் ஓட்டு நிர்ணயிப்பவர்கள் முக்கியமாக ஏழைகளுக்கு ஐஐடியில் படித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்பதை என்ன சொல்லி புரிய வைப்பார்கள்? <br /><br />அது மட்டுமின்றி ஏதோ தேர்தலுக்காகவே திடீரென்று புறப்பட்ட மாதிரியல்லவா இருக்கிறது? ஒருவேளை கட்சி சார் பத்திரிக்கைகளின் இருட்டடிப்பு கூட இதற்கு காரணமாக இருக்கலாம், ஆனால் இந்த இருட்டடிப்பையே சமாளிக்க முடியாதவர்கள் பதவியில் பிரச்னைகளை எப்படி சமாளிக்க முடியும்? (நான் எந்த பத்திரிக்கையிலும் இவை பற்றிய செய்திகள், பிரச்சாரங்கள், பேட்டிகள் படித்ததாக ஞாபகமில்லை)<br /><br />கடைசியாக ஒன்று மக்களுக்கு நல்லது செய்ய தேர்தலில் ஜெயிக்க நல்லவர்களாக இருப்பது மட்டும் போதாது, மார்கெட்டிங்கில் ஆரம்பித்து பொறுமை வரை நிறைய வேண்டும்.<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6347226.post-1146553887334656682006-05-01T23:38:00.000-07:002006-05-02T01:32:03.680-07:00தேர்தல் 206002/05/2060<br />காலை கொஞ்சம் லேட்டாக தான் எழுந்தான் ராமசாமி என்கிற அந்த இளைஞன் வெளியே பெருங்குரலில் மைக் சத்தம் கேட்டது,குடிசையிலிருந்து வெளியே வந்து பார்த்தான்.கையில் மஞ்சள் நோட்டீஸை ஒரு கரை வேட்டி திணித்தது.அவனுக்கு தெரியும் நகரத்தில் பிரசாரம் வேறு மாதிரியும் கிராமங்களில் வேறு மாதிரியும் செய்யப்படுகிறது,அங்கே டிஜிட்டல் பேனர் இங்கே மஞ்சள் நோட்டீஸ்.முன்பொரு காலத்தில் கருணாநிதி என்கிற தலைவர் "கிராமங்களில் லேட்டஸ்ட் டெக்னாலஜி வாயிலான பிரச்சாரங்களில் ஈடுபடாதீர்கள் நம்மை பணக்கார கட்சி என்று நினைத்து விட வாய்ப்புள்ளது" என்று சொன்னதை மக்கள் மறந்தாலும் எல்லா கட்சிகளும் மறப்பதில்லை.<br /><br />நோட்டீஸில் பார்வையை ஓட்டினான், காவிரி நதி நீர் 738 ஆவது ஆணையம் அமைக்கப்பட்டு கண்டிப்பாக விவசாயிகளின் துயர் துடைக்கப்படும்.வீட்டுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும்.சடாரென ஒரு தலைவர் வாழ்நாள் முழுதும் இலவச அரிசி வழங்கப்படும் என்றதும் இன்னொரு தலைவர் அரிசி மட்டுந்தானா நாங்கள் சமைக்க தேவையான குக்கர் முதல் மசாலா வரை வழங்குவோம் என்றதும் அவன் நினைவுக்கு வந்தது.<br /><br />தமிழ் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படும்...பெரிதாக சிரித்தான் எதற்கு எந்த வேலைக்கும் போகாமல் இருக்கவா? இவன் கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறான் பீஸா டெலிவரி பாயாக.இதே ஆங்கிலம் சரளமென்றால் இன்னும் நல்ல நிலைமை தரும் கால் சென்டர்,பிபிஓ வில் சேர்ந்திருப்பான்.இவன் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தான் அப்புறமும் நல்ல மார்க் தான் ஓரளவு நடுத்தர குடும்பமாக இருந்திருந்தால் பெரிய படிப்பு சேர்ந்திருக்க முடியும், ஏழை நல்ல படிப்பில் சேர வகுப்பில் முதல் மாணவனாக அல்ல மாநிலத்தில் முதல் மாணவனாக வர வேண்டும் என அவன் அறிவான்,அந்தளவுக்கு அவன் அறிவாளி அல்லன்.<br /><br />அப்போதிருந்து இப்போது வரை தீர்க்க வேண்டிய பிரச்னைகள் நிறைய உண்டு, இப்போது வரை மின் இணைப்புகள் தரை கீழ் இணைப்பு தர வேண்டும் என்று எந்த கட்சியும் கூறவில்லை.இதனால் எவ்வளவு உயிரிழப்பு? மழை வந்தால் ஒரே நாளில் ஊருக்குள் வெள்ளம், அதில் மின்சாரம் தாக்கி சில பல உயிர் இழப்புகள்.அதற்கான உள்கட்டமைப்புகளை சரி செய்ய யாரும் வாக்குறுதி தரவில்லை.பொறியியல்,மருத்துவ படிப்புகளுக்கான கட்டணங்கள் மலைக்க வைக்கின்றன, அதை குறைக்க யாரும் முயற்சிக்கவில்லை.அரசாங்க வேலை வாய்ப்பு எட்டாக்கனி, வெளி நாட்டு கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அவர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் மற்ற மாநிலம் தேடி செல்கிறார்கள்,சுய தொழில் புரிய<br />விரும்புவோருக்கு உடனடி வங்கி கடன்,புற்றீசல் போல கல்லூரிகளுக்கு அனுமதி தராமல் சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்குதல்,சிறந்த சுற்றுலா தளங்களை பாதுகாத்தல்,உருவாக்குதல்,இன்னும் எவ்வளவோ.<br /><br />ஆனால் இவை எவையும் எந்த கட்சியின் வாக்குறுதியிலும் இல்லை காரணம் மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி.ஒவ்வொரு தனி மனிதனும் அவன் பி.எஃப் அவ்வளவு,அவனுக்கு என்னென்ன வசதி என்று தான் பார்க்கிறான் நாடாவது மண்ணாவது.இவர்களுக்கு அரசியல்வாதிகள் எப்படி தீர்வு சொல்ல முடியும் மேற்கண்ட வழிகளை தரலாம் ஆனால் அவை நீண்ட கால திட்டங்கள் மக்களை உடனடியாக கவர தற்காலிக திட்டங்கள் மூலம் அரசியல் அரியணை ஏறிவிட்டால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் இப்படிப்பட்ட மன நிலையில் மக்களும் கட்சிகளும் இருக்கும் வரையில் 2060 என்ன 3060ல் கூட ஏழைகள் குடிசையில் தான் இருப்பார்கள்.அவன் அப்பா சத்தம் போட்டார்,<br /><br />"டேய் என்னடா வானத்தை பாத்தாப்ல யோஜன? சட்டு புட்டுனு படிப்ப முடிச்சுட்டு வேலைக்கு போ இன்னும் ஆறு மாசத்துல நாலு காசு சேப்பம் குடிசைய சரி பண்ணலாம் அப்புறம் மழ காலம், நம்ம வாழ்க்கை நம்ம கையில மட்டுதான்"<br /><br />குறிப்பு: வலைப்பதிவர்களுக்கான மாதாந்திரப்போட்டிக்கு இப்பதிவு அளிக்கப்பட்டுள்ளது,இதே போன்ற மற்ற நண்பர்களின் பதிவுகளைக் காண <a href="http://www.thenkoodu.com/contestants.php" target="_blank">இங்கு</a> க்ளிக்கவும்.மே 21 முதல் 25 வரை ஓட்டெடுப்பு நிகழும் (இது ச்சும்மா ஒரு இன்ஃபர்மேஷனுக்கு மட்டுந்தான் ஹி ஹி)<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6347226.post-1146142165451974402006-04-27T05:29:00.000-07:002006-04-27T06:05:12.083-07:00எல்லாரும் அரசியல்வாதிங்க தானே...சமீபத்துல வைகோ எங்க கூட்டம் போட்டாலும் அங்க யாராவது ஒருத்தர் எந்திரிச்சி "அம்மா கிட்ட எவ்ளோ தலைவா வாங்கினீங்க?" என்றோ "40 கோடி என்ன பண்ணீங்க தலைவா" என்றோ டார்ச்சர் பண்ணிய விஷயம் தினசரி ஏடுகளில் (தினகரனில் பெருசா...) வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.அவரு எவ்ளோ கடுப்பாகிருப்பாரு? அது உண்மையோ என்னவோ அத்த விடுங்க (அதான் நினைச்சிருப்பாரு ஒரு வேளை காசு கொடுத்து எதிர்க்கட்சி சதியோன்னு அதுக்காக இவரும் சதி செஞ்சோ என்னவோ) நேத்தோ, முந்தா நேத்தோ கருணாநிதி பிரச்சாரம் பண்ணும்போது,"தலைவா சன் டிவி வெச்சு கோடி கோடியா சம்பாதிக்கிற... எனக்கு (?!) எதுமே தர்லியே" என்று நேரிடையாக கேட்டிருக்கிறார், வைகோ போல கருணாநிதி பொறுமையாக பேசவெல்லாம் இல்ல... கில்லியில் வருவது போல "யேய் யார்யா அது தூக்கு அந்த ஆள" என்று கட்டளை பறக்க 'தொண்டர்'களால் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்.<br /><br />(ஒரு வேளை ஆள் ஏற்பாடு பண்ணி செய்யப்பட்டிருந்தால்) இதெல்லாம் தேவையா...? எல்லாரும் அரசியல்ல இருக்கும்போது ஒருத்தர் மட்டுந்தான் கேள்வி கேக்க முடியற நிலையா/ ஏற்கனவே இதே ஸ்டைல்ல பதவி விலகற பிரச்னையை ஆரம்பிச்சு அது எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தத பாத்தும் இப்டி உள்குத்து வச்சுக்கலாமா?<br /><br />அப்புறம்...பேசாம மக்கள்ல ஒருத்தரே இப்டி ஏதாவது அப்பப்ப பண்ணினா எதிர் கட்சிக்காரன் தான் பண்ணினான்னு ஒவ்வொரு கட்சியும் ஆள் வச்சு மக்களுக்கு நல்லது பண்ண மாட்டாங்க? (மாட்டாங்க!) இத ஒரு ப்ளானா ஹீரோ செயல்படுத்தி முதல்வராகிற கதைக்கு ஆயுள் தடை விதிக்கிறேன் (அட்லீஸ்ட் என் ஆயுள் வரை)<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6347226.post-1145785890859467932006-04-23T02:29:00.000-07:002006-04-24T21:40:16.186-07:00சேவைக்குறைபாடுநேற்று செல்பேசி ரீசார்ஜ் செய்ய டாப் அப் கார்டு வாங்கினேன், ரீசார்ஜ் செய்தால் "other error" என்றது, நான் சந்தேகப்பட்டது போலவே கடைக்காரர் கேட்டார்,"எந்த ஊர்ல சிம் வாங்கினீங்க?" "சென்னை" நாட்டாமை 'செல்லாது செல்லாது' என்பது போல விளக்கம் தந்தார்,"சென்னைல வாங்கினா ரீசார்ஜ் கூப்பனும் அங்க வாங்கணும் அது தான் வேலை செய்யும் தமிழ் நாட்டில வாங்கின கூப்பன் ஆகாது" என்றார்.யேய் என்னய்யா இது சென்னை வேற தமிழ் நாடு வேறங்கிற மாதிரியே பேசுறன்னு நினைச்சேன்.சரி ஒரு மாசம் டாக் டைம் இருக்கே அது வரை உபயோகிப்போம்னு சென்னையில் இருக்கும் நண்பனுக்கு பணம் போட ஐசிஐசிஐ பேங்க் போனேன்.<br /><br />நண்பனிடம் அவன் பேங்க் அக்கவுண்ட் நம்பரும் பெற்றிருந்தேன், 12 மணியோடு மூடி விடுவார்கள் இன்னும் கால் மணி நேரமே இருக்கும் என்ற நிலையில் படிவம் நிரப்பி கொண்டு போய் தந்தால் "இது அக்கவுண்ட் நம்பரே இல்லை ஐசிஐசிஐயில் 15 இலக்கம் இருக்கும் பாருங்கள் 12 தான் இருக்கிறது" என்றார்."ஓ அப்படியா எனக்கு ஐசிஐசிஐ பத்தி தெரியாது, சரி கண்டிப்பா தெரியும் தானே இது தப்பான நம்பர்னு?" என்றேன், தலையை வித்தியாசமாக ஆட்டினார், அப்போதே டவுட் ஆனேன்...நான் நினைத்த மாதிரியே என் நண்பன் அப்புறம் (இரவு தான் லைன் கிடைத்தது) சொன்னான்,"டேய் அந்த 12 நம்பருக்கு முன்னாடி மூணு சைபர் சேக்கணும்டா பேங்க்லயே சொல்லுவாங்களே"<br /><br />இந்தியாவில் கஸ்டமர் கேர் என்பதே அரிதான வார்த்தையாக இருக்கிறது, இங்கே கவனிக்க வேண்டியது என் பிரச்னையல்ல அதன் வீரியம் குறைவாகக்கூட இருக்கட்டும், அலட்சியம் தான் எனக்கு அதிருப்தியை தருகிறது.அதுவும் சில கெட்ட தினங்களில் இப்படி தொடர்ச்சியாக. தனிப்பட்ட முறையில் இனி வழக்குகள் போட்டு தாக்கப்போகிறேன் (அக்கா பி.எல் கடைசி வருடம் படிக்கிறார்...ஹி ஹி)<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6347226.post-1145443465222299102006-04-19T03:42:00.000-07:002006-04-19T03:44:25.540-07:00ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்சமீபத்தில் ஹேரீஸ் ஜெயராஜின் வேட்டையாடு விளையாடு பாடல்கள் கேட்டேன் 'மஞ்சள் வெயில் மறையுதே' பாடல் எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்று திரும்ப திரும்ப யோசனை.அது அலை பாயுதேவில் வரும் 'என்றென்றும் புன்னகை' போல் இல்லை? அதுவும் சின்ன தாளம் கூட அப்படியே.<br /><br />'பார்த்த முதல் நாளே' கூட 'சுட்டும் விழிச் சுடரே'வின் மேக் அப் தான். யுவன்,ஹேரீஸ் இருவருமே தேவாவின் கலையுலக வாரிசுகள் ஆக முயற்சிக்கிறார்கள் நல்லதில்லை.... பாட்டு ஹிட் ஆகிறது மட்டும் முக்கியமில்ல.... ஒன் பாத்ரூமுக்கும் தான் ஓட்றான் ஓட்டப்பந்தயத்துக்கும் தான் ஓட்றான் வித்தியாசமிருக்கில்ல? <br /><br />இத கண்டுபிடிக்கிறதுல தான் என்னா சொகம்...(யார்பா அது... நிலா நதில வர்ற கவிதைகள்ல நிறைய பூக்காட்டில ஏற்கனவே எழுதினது இது ரிப்பீட்டு இல்லையான்னு கேக்குறது... மூச்)<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6347226.post-1145360051904803492006-04-18T04:29:00.000-07:002006-04-18T04:34:12.270-07:00தொலை நோக்கு பார்வை-ஜாலி பேட்டிசரத் குமார் அதிமுகவில் இணந்த கையோடு அளித்த பேட்டி (கொஞ்சம் கற்பனை கலந்து) :<br /><br />"திமுகவிலிருந்து விலகிய காரணம்? <br /><br />அங்கே குடும்ப அரசியல் நடக்கிறது மற்றும் அவருக்கு தொலை நோக்கு பார்வை இல்லை. <br /><br />தொலை நோக்கு பார்வை இல்லை என எப்படி சொல்கிறீர்கள்? <br /><br />நேற்று சேப்பாக்கத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஒரு குழந்தைக்கு பேர் வைக்க சொல்லி இருந்தார்கள் அவர் கோமள வல்லி என மனசாட்சியே இல்லாமல் பெயர் வைத்திருக்கிறார்.இப்போதே இந்தப்பெயர் படு ஓல்டு பேஷன் இன்னும் இருபது வருடங்கள் கழித்து அந்த பெண் குழந்தை தன் தந்தையிடம் "ஏம்ப்பா நேக்கு இந்த பேர் வச்சேள்?" என்று அபிதா ரேஞ்சுக்கு அழும் என நினைத்துப் பார்த்தாரா? இதிலிருந்தே தெரியவில்லையா அவருக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என? இவ்வாறு தெரிவித்தார். மற்றும் அருகிலிருந்த ஜெ. இடை மறித்து "கருணாநிதி கிட்டப்பார்வை இருப்பதால் கண்ணாடி அணிந்திருக்கும்போது தொலை நோக்கு பார்வை எப்படி இருக்கும்?" என கேள்வி எழுப்பினார். <br /><br />இதற்கு பதிலடியாக கருணாநிதி அளித்த பேட்டி:<br /><br />உங்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என சரத் கூறியிருக்கிறாரே? <br /><br />"சினிமாவில் இறங்கிய காலம் முதலே மன்னாதி மன்னனில் எம்ஜிஆருக்கு இடுப்புக்கு கீழே இழையோடும் இலைகள் போன்ற பேஷனை யோசனை செய்தவன் நான் என்பது வரலாறு.<br />கோமள வல்லி என்பது இருபது வருடம் கழித்து பேஷனாகும் என்ற தயாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்கியே அப்பெயர் சூட்டப்பட்டது அவர்களது கொக்கரிப்புக்கு காலம் பதில் சொல்லும் என்பதை அறிந்து கொள் கழகக்கண்மணியே"<br />அருகில் தயாநிதி இடைமறித்து,"கிட்டப்பார்வை இருப்பவர்களால் தூரத்தில் தான் பார்க்க முடியாதே தவிர தொலை நோக்கு என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இது கூட தெரியாதவர் தான் ஆட்சியில் இருக்கிறார் மற்றும் (வழக்கம் போல) இத்தனி நபர் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மான நஷ்ட வழக்கு போடப்படும்" என பயமுறுத்...சே பதில் சொன்னார்.<div class="blogger-post-footer"><script type="text/javascript"><!--
google_ad_client = "pub-9395963534212348";
google_ad_width = 234;
google_ad_height = 60;
google_ad_format = "234x60_as";
google_ad_type = "text_image";
google_ad_channel ="";
google_color_border = "F6F7F7";
google_color_bg = "F6F7F7";
google_color_link = "000000";
google_color_url = "0033FF";
google_color_text = "000000";
//--></script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script></div>Unknownnoreply@blogger.com0