Friday, July 28, 2006

அனைவருக்கும் வணக்கம்

கோகுல் என்கிற (சில நாட்கள் காணாமல் போயிருந்த) தொல்லை திரும்பவும் வந்து விட்டது.தமிழ்மணத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது போல... வாழ்த்துக்கள்

நட்சத்திர வாரத்தில் எழுத முடியாது போய் விட்டது அதை விட முக்கியம் அதை சொல்லாமல் கூட விட்ட என்னுடைய அநாகரிகம்.நிர்வாகிகள் மன்னிக்கவும்.

இருப்பினும் என்னை மன்னித்து விட்டார்கள் நன்றிகள் பல. நிர்வாகவியல் (MBA) படிப்பில் சில பல எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் இருப்பினும் ஓரளவு செட்டிலாகி விட்டேன்.நாமக்கல் சிபியிடம் மட்டும் எழுத முடியாமைக்கு புலம்பினேன்...எதிர் முனை தொலைபேசியில் (ரொம்ப சந்தோஷத்துடன்...?!) படிப்பு தான் முக்கியம் என குறுந்தகவல்(SMS) அனுப்பினார்.


தினமும் கணிணி முன் உட்கார நேரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது, எனினும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு மாதமேனும் ஆகலாம் எனவே பூக்காடு மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.

நாளை முதல் மீண்டும் சந்திப்போம்...980980

Categories: