நேற்று லேட்டாக விகடன் படித்தேன் சுஜாதா கற்றதும்பெற்றதும் முடித்து விட்டார்(இப்போதைக்கு).நிறைய அறிவியல்பூர்வமான விஷயங்கள், சர்ச்சைகள், லைட்டாக பந்தா ஆனால் எல்லாமே ரசிக்கக்கூடியதாய்.
அப்புறம் கருவாச்சி காவியம், வைரமுத்து எழுதியது ரசிக்க முடிகிறது.சகஜமாக அந்தரங்க உறுப்புகளைக்கூட வர்ணிக்கிறார்.ஆனால் நேற்று படித்ததில் அதில் வரும் ஆட்டுக்கு ஆண்மையழிக்கிற டாபிக்கில் ஏதோ மிருக வைத்தியர் ரேஞ்சுக்கு விளக்குகிறார்.எனக்கு குமட்டியது.முன்பு இதே எஃபெக்டில் பிரசவத்தை விளக்கினார்.பெண்கள் புளகாங்கிதப்பட்டு தனக்கே பிரசவம் பார்த்துக்கொண்ட மாதிரி இருந்தது என்று பாராட்டியிருந்தார்கள், ஸாரி நேற்று எனக்கும் அதே மாதிரியான ஒரு ஃபீல் தான்.
மதன் பதில்கள்,வழக்கம் போல் எல்லாமே அருமை.'காஸ்' பற்றி கேட்ட வாசகரை ஓவராகவே வாரி விட்டார்.
விஜயகாந்த் பேட்டி எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள், அரசியல்வாதியாக தேறுவார் போலத்தான் தெரிகிறது.ஆனால் இவரிடம் இப்படி வக்கனையாக கேள்வி கேட்பவர்கள் முக்கிய அரசியல் தலைகளிடமும் நாக்கை பிடுங்கும் கேள்வி கேட்டால் பத்திரிக்கை தர்மத்தை பாராட்டலாம்
Wednesday, January 18, 2006
Sunday, January 15, 2006
ஆஹா
ஆஹா இன்னாப்பா எதேச்சையா வந்து பாத்தா எல்லாமே மாறிக்கிடக்கு
திரும்ப மூணு போஸ்ட் இருந்தாதான் சேர்ப்பேன்னு தமிழ்மணம் அடம் பிடிக்குது நான் எங்கே போறது அதுக்குள்ள மூணு பதிவுக்கு அதான் ஒன்ன மூணாக்கிட்டேன் ஹி ஹி
திரும்ப மூணு போஸ்ட் இருந்தாதான் சேர்ப்பேன்னு தமிழ்மணம் அடம் பிடிக்குது நான் எங்கே போறது அதுக்குள்ள மூணு பதிவுக்கு அதான் ஒன்ன மூணாக்கிட்டேன் ஹி ஹி
ஹைக்கூ
அவள் என் தோழி
சுற்றிலும் அழகான தோழிகள்
----------------------------------
அவள் இடித்தவனை திட்டுகிறாள்
நிறைய பேர் தலை குனிகிறார்கள்
சுற்றிலும் அழகான தோழிகள்
----------------------------------
அவள் இடித்தவனை திட்டுகிறாள்
நிறைய பேர் தலை குனிகிறார்கள்
ஹைக்கூ
தமிழர் திருநாள்....?!@
ஹேப்பி பொங்கல்!
--------------------------------
நாம் காதலிக்க வேண்டாம்
உன் உள்ளாடை வெளியே தெரிகிறது
----------------------------------
ஹேப்பி பொங்கல்!
--------------------------------
நாம் காதலிக்க வேண்டாம்
உன் உள்ளாடை வெளியே தெரிகிறது
----------------------------------
Sunday, January 08, 2006
தமிழ் (சினிமாப்பாடல்)- ல ஒரு சந்தேகம்
தமிழ் - ல எனக்கு விருப்பம் அதிகம். ஆனா அறிவு அதிகமில்ல தான், இருந்தாலும் ரொம்ப நாளா எனக்குள்ள இலக்கணம் சம்பத்தப்பட்ட சந்தேகத்தை கேக்குறேன் .அதிலயும் இது ரொம்ப பிரபலமான இளம் கவிஞரோட பாடல்.சில பள்ளிகள்ல பிரேயர் நேரத்தில் கூட பாடப்பட்டது.
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" அப்டின்னு ஆட்டோகிராஃப் படத்தில ஒரு பாட்டு வரும்.
ஒவ்வொரு என்பது பன்மையை குழுவை குறிக்கும் வார்த்தை தான் ஆனால் அதற்கடுத்த வார்த்தை பன்மையை குறிக்கக்கூடாது.
பூக்களுமே அப்படிங்கறது பன்மை இது வந்தா ஒண்ணு இதுக்கு முன்னாடி "ஒவ்வொரு" வராது,"எல்லா" தான் வரும். "ஒவ்வொரு" வந்தா பூவுமே, மாணவனுமே, மொழியுமே என ஒருமை தான் வரும் அதான் "சொல்கிறதே" .ஒண்ணு பாடல் "ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே"ன்னு வரும் இல்லையா "எல்லா பூக்களுமே சொல்கின்றனவே" -அப்டின்னு நினைக்கிறேன்.
குழப்பம் வந்தால் ஆங்கிலத்தில் ஒப்பீடு செய்து பாருங்களேன் Anyone is (not are) liable to fall ill,Every car has (not have) been tested
இலக்கணப்பிழை நடைமுறையில் சாதாரணமானதே ஆனால் கவிஞர்களுக்குமா?
கவிதைகள் அப்போதைக்கு ரசிக்கப்படுபவை என்பதல்லாமல் எதிர்கால சந்ததியும் படிக்கும் என்பதாலேயே கேட்டேன்.
எதிர்காலத்தில தமிழ் இருந்தாத்தானேங்கறீங்களா....
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" அப்டின்னு ஆட்டோகிராஃப் படத்தில ஒரு பாட்டு வரும்.
ஒவ்வொரு என்பது பன்மையை குழுவை குறிக்கும் வார்த்தை தான் ஆனால் அதற்கடுத்த வார்த்தை பன்மையை குறிக்கக்கூடாது.
பூக்களுமே அப்படிங்கறது பன்மை இது வந்தா ஒண்ணு இதுக்கு முன்னாடி "ஒவ்வொரு" வராது,"எல்லா" தான் வரும். "ஒவ்வொரு" வந்தா பூவுமே, மாணவனுமே, மொழியுமே என ஒருமை தான் வரும் அதான் "சொல்கிறதே" .ஒண்ணு பாடல் "ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே"ன்னு வரும் இல்லையா "எல்லா பூக்களுமே சொல்கின்றனவே" -அப்டின்னு நினைக்கிறேன்.
குழப்பம் வந்தால் ஆங்கிலத்தில் ஒப்பீடு செய்து பாருங்களேன் Anyone is (not are) liable to fall ill,Every car has (not have) been tested
இலக்கணப்பிழை நடைமுறையில் சாதாரணமானதே ஆனால் கவிஞர்களுக்குமா?
கவிதைகள் அப்போதைக்கு ரசிக்கப்படுபவை என்பதல்லாமல் எதிர்கால சந்ததியும் படிக்கும் என்பதாலேயே கேட்டேன்.
எதிர்காலத்தில தமிழ் இருந்தாத்தானேங்கறீங்களா....
Subscribe to:
Posts (Atom)